நாட்டின் உபரிபணம்

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியினை, ஆம் அதே அந்த தொகைதான் மத்திய அரசு பெற்றிருப்பது விவாதமாகின்றது

ரிசர்வ் வங்கியின் உபரிநிதி என்பது அவசர தேவைக்காக கையிருப்பில் வைக்கும் தொகை

போர்காலம் இன்னும் பேரிடர் காலத்தில் அதை பயன்படுத்துவார்கள்

காங்கிரஸ் அரசு கூட சிலமுறை கோரியது

எனினும் இது பெரும் தொகை என்பதால் ஆளாளுக்கு ஆலோசனை எச்சரிக்கை என கிளம்பிவிட்டார்கள்

அந்த பணத்தை மோடியோ நிர்மலாவோ எடுத்து கொண்டு ஓடபோவதில்லை, நாட்டுபணம் நாட்டின் நலனுக்கே உள்ளெடுக்கபடுகின்றது

நிலமை சரியானபின் அந்த பணம் தானாக ரிசர்வ் வங்கிக்கு உபரிநிதியாக திரும்பும்

இவ்வளவு பேசுகின்றார்களே, நாட்டின் பெரும்பான்மை வருமானம் அரசு ஊழியர் சம்பளமாகவே செல்கின்றது

எவனாவது அரசு ஊழியர் சம்பளம் குறைக்க வேண்டும் என சொல்லட்டும் பார்க்கலாம், மாட்டார்கள்

அதெல்லாம் பற்றி, அவர்களுக்கு அள்ளி இறைக்கபடும் தண்ட சம்பளம் பற்றி எல்லாம் நாம் பேசகூடாது

எம்பி எம்.எல்.ஏ சலுகைகள் குறைக்கபட வேண்டும் என யாராவது சொல்கின்றார்களா இல்லை

வெட்டி செலவுகள் ஏராளம் நடக்கும் தேசமிது, அதெல்லாம் யாரும் கவலைபட்டதாய் தெரியவில்லை.

அவசரத்துக்கு வைக்கபடும் நிதி, பொருளாதாரத்தை தாங்க பயன்படுவதில் என்ன தவறு?

அது பயன்பாட்டில் உள்ள பணம் அல்ல, லாக்கரில் இருக்கும் பணம் போல தனி கணக்கு.

நாட்டின் உபரிபணம் நாட்டுக்காய் செலவழிக்கபடுவதில் தவறேதுமில்லை

இந்திய வங்கியின் பணத்தை இந்திய அரசு எடுக்காமல் அமெரிக்க, ரஷ்ய,சீன அரசா எடுக்கும்?