நாட்டு நடப்பு இன்று…. 3.1.2018
புனேவில் தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் , மும்பையில் கடும் பாதுகாப்பு : செய்தி
அங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சிவசேனா எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி அடிதடிகளில் இருவருமே இரட்டை குழல் துப்பாக்கிகள்
எங்கே அந்த அங்கிள் சைமன்?
“மராட்டிய பெருமகனார் பால் தாக்கரே” என முன்பொருமுறை அந்த கோஷ்டியினை இனமான மிக்க இயக்கம் என பாராட்டிவிட்டு சிவசேனாவிற்காக தமிழரிடம் வோட்டு கேட்டுவிட்டு வந்தவர் இவர்தான்.
அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு
விபத்து போன்ற அசாதரண நேரம் என்றால் சரி, வழக்கமான தானம் செய்ய செல்ல ஏன் விடுமுறை? அதை சனி ஞாயிறில் செய்தால்தான் என்ன?
கிட்னி தானம் கொடுத்தால் சம்பளத்துடன் ஆயுள்முழுக்க விடுப்பு வழங்குவார்கள் போல..
ஈழத் தமிழர்களை பாதுகாத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் எம்.ஜி.ஆர்.: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
இந்த இந்திராகாந்தி என்றொருவர் இருந்தாரே, அவர் கண்ணசைக்காவிட்டால் ராமசந்திரன் உதவியிருப்பாரா?
அப்படி உதவிய ராமசந்திரன் பின்னர் பிரபாகரனை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டதும், பின் ராஜிவ் பிரபா சந்திப்பில் என்னை விட்டுவிடுங்கள் என அலறி ஓடியதும் எதற்காக?
அமைதிபடை இலங்கையில் சண்டை தொடங்கிய காலத்தில் சென்னையில் ராஜிவுடன் கை கோர்த்து நின்ற ராமசந்திரன் யார்?
பழனிச்சாமி அரசின் ஆளுநர் என்பது மிக சரியாக இருக்கின்றது
இந்நாடு அமைதியாய் இருக்க கூடாது அவ்வப்போது சர்ச்சை வளர்க்கவேண்டும் என்பது பாஜகவினரின் கொள்கைகளில் ஒன்று, அப்படி ஒரு எம்.எல்.ஏ வழக்கம் போல ஆரம்பித்துவிட்டார்
அதாவது இந்துஸ்தானில் இருப்பவர் எல்லோரும் இந்துக்கள், என கிளம்பிவிட்டார்
ஆப்கானிஸ்தானில் இருப்பவர் ஆப்கானியர், உஸ்கெக்கிஸ்தானில் இருப்பவர் உஸ்கெக்திஸ்தானியர், சீனாவில் இருப்வர் சீனர், பிரிட்டனில் இருப்பவர் பிரிட்டானியர், ரஷ்யாவில் இருப்பவர் ரஷ்யர்
அப்படி இந்துஸ்தானத்தின் இருப்பவர் இந்தியர் என்றுதானே சொல்லவேண்டும்?