நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல : ரஜினி
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல, கட்சியே இன்னும் தொடங்கவில்லை அதனால் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல முடியாது : ரஜினி
அதானே பொண்ணு பார்த்த பின்புதானே பெண்ணின் உயரம், அழகு பற்றி எல்லாம் பேசவேண்டும்
இன்னும் பெண்ணே பிறக்கவில்லையே, இனிதான் பெண் பிறந்து வளர்ந்து, பருவமடைந்து அதன் பின் இவர் பார்த்து அழைப்பிதழ் அடிக்க எவ்வளவு காலமாகும், இது தெரியாமல் கருத்து கேட்கின்றார்களாம்.
கட்சி தொடங்க போகிறேன் என்றார், அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார், ராமசந்திரன் ஆட்சியினை நானே கொடுப்பேன் திருச்செந்தூர் வைரவேலை ஒளித்து வையுங்கள் என்ற அளவு பேசினார்
இப்பொழுது மகா பல்டி, இதனை சென்னையிலே சொன்னால் என்ன?
ஏன் இமயமலையில் சென்று சொல்ல வேண்டும்?
இந்த பல்டி அடிக்கவா இமயமலை உச்சிக்கு சென்றார் ரஜினி?