நான் என் கடமையினை செய்கின்றேன்
வரவர நீ சரியில்லை, ஆரிய அடிவருடியாக மாறுகின்றாய், நீ ஏன் கலைஞரை பற்றி எல்லாம் எழுதினாய், நீ இன்னொரு சைமனா?? நீ நிலை இல்லாதவன் என்றெல்லாம் குதிக்கின்றார்கள்
நான் உணர்வால் முதலில் இந்தியன். அதனின்று இம்மி அளவும் பிசகும் எண்ணமே இல்லை. அந்த திருநாடு அவ்வளவு உயர்ந்தது என்ற எண்ணத்தில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.
இந்த திமுகவினர் எப்பொழுது எம்மிடம் வந்தனர்? நாம் அங்கிள் சைமனை கிழிக்கும் பொழுது வந்தனர். ஆம் அப்படித்தான் என விசிலடித்தனர்.
நாம் என்ன சொன்னோம், இத்தேசம் ஈழமக்களுக்கு துணை நின்ற வரலாறுகளை சொன்னோம், கலைஞர் போராளிகளுக்கு செய்த சவால் நிறைந்த விஷயங்களை சொன்னோம், அதனை இந்தியனாக சொன்னோமேயன்றி திமு கழகத்தவராக சொல்லவேயில்லை.
தமிழன் யாருக்கு கலைஞரின் தமிழ் பிடிக்காது? அதனை பிடிக்காமல் போனவன் தமிழனாக இருக்க முடியாது. கண்ணதாசன், திருவிக, கிவாஜா, மபொசி,பசும்பொன் தேவர் அண்ணா போன்ற பெரும் தமிழறிவு அடையாளங்களில் கலைஞரும் ஒருவர்.
இன்னொன்று திமுக திராவிட நாடு எனும் கோரிக்கையினை கைவிட்டுவிட்டு இந்திய தேசியத்தை ஏற்றுகொண்டபின் ஆட்சிக்கு வந்த இயக்கம். அதன் தலைவர் கலைஞர் என்பதால் அவரை ரசிப்பதில் என்ன சிக்கல்?
மற்றபடி நாம் திராவிட வெறியன் அல்லாம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் நடையினை கட்டுங்கள்.
அணுவுலை சிக்கல் என்றால், இந்நாட்டில் மும்பையில் எல்லாம் அணுவுலை இல்லையா? ஏதோ தமிழகத்தில் மட்டும் என்பது போல அதனை தமிழர் எதிர்ப்பு பிரச்சினையாக்குவது ஏன்?
காவேரியில் நீர்வரவில்லை என பொங்குகின்றீர்கள்? நொய்யலிலும், அமரவாதியிலு, பவானியிலும் நீங்கள் டெல்டா மாவட்டத்திற்கு உள்ள உரிமையினை கொடுக்கின்றீர்களா?
இல்லை, கோவை வாசிகள் விவரமானவர்கள், கன்னடன் மட்டும் அறிவே இல்லாதவனா?
ஈழ பிரச்சினையில் இந்தியா துரோகம் செய்ததா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் பிரபாகரன் மீது பிழையே இல்லையா? முள்ளிவாய்க்கால் என ஒப்பாரி வைத்தது மக்களை காக்கவா? அவனை காக்கவா?
நீட் தேர்வு இந்தியா முழுக்க உண்டு, இங்கு சில சிக்கல்கள் இருக்குமாயின் அது மாநில அரசு விட்ட கோடாகவே இருக்கும்.
அதுவும் அதிரடியான பொய்களை எப்படி விட முடியும்? சிலர் தமிழனுக்கு மதமே இல்லை என்கின்றான், தமிழ் வளர்த்த அகத்தியர் ஒரு சிவனடியார் என்பதையுமா மறப்பான்? அவர்களுக்கு எல்லாம் ஒரு நாள் இருக்கின்றது
திராவிடத்திற்கு அன்று நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அண்ணா, கலைஞர் என இந்திய இறையாண்மையினை ஏற்ற தலைவர்கள் இருந்தார்கள்.
அது கவனமாக கையாளபடவேண்டிய விஷயம். அந்த ஆற்றல் முக ஸ்டாலினுக்கு இருந்தால் கவலைபட ஒன்றுமில்லை
ஆனால் சீமானும், திருமுருகன் அல்ட்ராசிட்டிகள் எல்லாம் பேசுவதை கேட்டுகொண்டிருக்க முடியுமா?
அந்நிய நாட்டு தீவிரவாதியின் கொள்கையினை பிடித்துகொண்டு, இங்கு ஆரியம், பிராமணியம் என சும்மா பிரிவினை பேசிகொண்டிருந்தால் அதனை கண்டிக்கவேண்டியது இந்தியன் கடமை
நான் என் கடமையினை செய்கின்றேன்
எமக்கு மோடி, ராகுல் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. இத்தேசத்தை எவர் நல்லமுறையில் ஆண்டாலும் மகிழ்ச்சியே. ஒரு நல்ல இந்தியனின் எண்ணம் அப்படித்தான் இருக்கும்.
அமைதியான, வளமான இந்தியாவினை எதிர்ப்பார்க்காமல் வேறு எதனை நல்ல இந்தியன் எதிர்பார்க்க முடியும்?
அதனால் சொல்கின்றேன், நான் திராவிட பிரிவினைவாத ஆதரவாளன் என நினைத்திருந்தால் நடையினை கட்டுங்கள்.
நாடு முக்கியம் என நினைக்கும் 4 பேர் இருந்தால் போதும்.