“நான் ஏன் மோடியினை வெறுக்கின்றேன்?” என்றொரு புத்தகம் எழுதட்டும்
இந்த மாரிதாஸ் என்றொரு பதிவர் உண்டு, கொஞ்சம் கொஞ்சமாக பக்தாஸாக மாறினார். மோடி பெயருக்கு அர்ச்சனை செய்யுமளவு கொடூர பக்தராக மாறினார்
திடீரென ஒருநாள் “நான் ஏன் மோடியினை ஆதரிகின்றேன்?” என ஒரு புத்தகம் எழுதினார், ரஜினியினை சந்தித்தார் இன்னும் பல அழிச்சாட்டியங்களை மோடி பெயரில் செய்தார்.
இப்பொழுது புலம்புகின்றார்
சொந்த தொழில் செய்பவர் போல, அவர் அப்புத்தகம் எழுதிய பின் 40% வாடிக்கையாளர்கள் “நீ மோடி ஆளா? ச்ச்சீ போ, உன்னோடு அன்னம் தண்ணி புழங்கமுடியாது” என விலகிவிட்டார்களாம்
என் கொள்கைக்காக என்னை தண்டிப்பதா என புலம்பிகொண்டிருக்கின்றார் மனிதர்
இப்போதைய நிலவரம் அதுதான், காங்கிரஸ் என்றால் கூட கொஞ்சமாவது ஏற்கும் தமிழர்களுக்கு பாஜக என்பது கசப்பான கட்சி, இங்குள்ள யதார்த்தம் அது
வன்முறையாளர் என்பதற்காக புலிகளையே தூர எறிந்தவர்கள் தமிழர்கள், 1991க்கு முன் இருந்த புலி அபிமானம் அளவிட முடியாதது, அதுவே 2009ல் கொஞ்சமும் இல்லாதிருந்தது.
இங்கு மசூதி இடித்தவர்கள் மத கலவரம் தூண்ட வருபவர்கள் எல்லாம் நிச்சயம் காலூன்ற முடியாது
வன்முறையாளர்கள், ஒரு மாதிரி குழப்பவாதிகள்,மதவெறி பிடித்த கூட்டமெல்லாம் இங்கு வெற்றிபெற முடியாது
எல்லோரையும் தன்போல் நினைத்து புத்தகம் எழுதிய மாரிதாஸ் இப்பொழுது உண்மை நிலவரத்தை புரிந்துகொண்டார்
சரி தவறு செய்துவிட்டார், இனி எப்படி நிவர்த்தி செய்யலாம்
“நான் ஏன் மோடியினை வெறுக்கின்றேன்?” என்றொரு புத்தகம் எழுதட்டும்
மறுநாளே அவரின் தொழில் 400% அதிகரிக்கும்