நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, ராமன் கலங்கி சொல்வான்
“நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?
அந்த சீதை பலமிக்கவள், அந்த வில்லை அவளே ஒரு கையில் தூக்கினாள் அதை கண்டபின்பே அவளுக்கு சமமான கணவன் வேண்டுமென வில்லுக்கு நாணேற்றும் பந்தயம் வைத்தான் ஜனகன்
ஆம் அவள் நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் ஆனால் கொல்லவில்லை
அந்த வாலி நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் அவனும் கொல்லவில்லை
இதோ இந்த அனுமன் நினைத்தால் கொன்றிருக்கலாம் , அவனும் கொல்லவில்லை
ராஜ்யத்தை பரதன் எடுத்தான், என் நிம்மதியினை சீதை எடுத்தாள், ராவணனை வாலியினை கொன்ற பழி எல்லாம் நான் சுமந்தேன்
தந்தை கூட இருந்ததில்லை, பிள்ளைகள் கூட வாழவுமில்லை, சுமப்பதெல்லாம் பழி..
பழிசுமக்க மட்டும் பிறந்த பிறப்பா நான்?..”
அந்த காட்சிகள் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றன