நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? : முதல்வர் பழனிச்சாமி

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? முதல்வர் பதவியை விட்டு விலக தயார் : முதல்வர் பழனிச்சாமி

திருப்பதியில் வணங்கி கவேரியினை கொண்டுவந்தது போல மனிதர் இனி நிம்மதி வேண்டி சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லவோ இல்லை பழனிக்கு காவடி தூக்கி அலகு குத்தவோ தயாரின்றார் என்பது புரிகின்றது

முதல்வர் பதவி என்பது முள்கிரீடம், ராமசந்திரனின் உடல்நிலையும், ஜெயாவின் உடல்நிலையும் அதன் அழுத்தம் தாங்காமலே கெட்டது

கலைஞர் என்பவர் மகா அசாத்திய மனிதர் என்பதால் அவர்போக்கில் சுமந்தார்

இவ்வளவிற்கும் மத்திய அரசு எனும் அலாவுதீன் பூதம் தாலாட்ட சுகமாக ஆண்டுகொண்டிருகின்றார் பழனிச்சாமி

பூதம் காவலிருக்கும்போதே இப்படி அழுபவர், கலைஞர் போல மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் மொட்டை அடித்துவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவாய் ஆகியிருப்பார்

மிஸ்டர் பழனிச்சாமி, விருப்பமில்லா எந்த வேலையினையும் செய்யகூடாது , எங்கே உடனே உங்கள் பதவியினை ராஜினாமா செய்யுங்கள் பார்க்கலாம்

விடுவார்களா? டெல்லியினை மீறி ராஜினாமா செய்தால் வழக்கு மேல் வழக்கு பாய்ந்து இப்பொழுது இருக்கும் கொஞ்ச நிம்மதியும் போய்விடுமய்யா…


தினகரன் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : செய்தி

ஆசிட் வீச்சு முதல் ஆட்டோவில் ஆள் அனுப்பி குண்டு வீசுவது முதல் அந்த கலாச்சாரத்தினை தொடங்கி வைத்ததே அவர்கள் அல்லவா?

அந்த கலாச்சாரம் அவர்கள் மீதே திரும்புவதில் என்ன ஆச்சரியம்?