நாம் இப்பொழுது அங்கிளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்
குருடன் யானையினை பார்த்த கதை என்பதை இனி அங்கிள் சைமன் பார்த்த யானை கதை என மாற்றிகொள்ளலாம்
இப்படியா அள்ளிவிடுவது???
60 ஆயிரம் யானைகளை கப்பலில் ஏற்றி சென்று தமிழர் போரிட்டார்களாம், அங்கிள் இப்பொழுது அடுத்த காமெடி ஆரம்பித்துவிட்டார்
அங்கிள் படிக்கும் தமிழ் வரலாறு எல்லாம் எந்த ஓலைசுவடியில் இருகின்றது என்பதுதான் தெரியவே இல்லை
அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று பார்க்கமுடிந்தது, எப்படி இருந்த சைமன் இப்படி ஆகிவிட்டார் என சொல்லமுடியவில்லை
மாறாக புலிவேடமிட்ட பூனை ஒன்று “மியாவ் மியாவ்” என கத்துவது புரிந்தது
அதாவது அங்கிளானவர் பெயரை அவரின் தும்பிக்கள் கெடுக்கின்றார்களாம், இதனால் அங்கிளின் உழைப்பு எல்லாம் வீணாகின்றதாம்
பலர் அவரிடமே உங்கள் எளிய தமிழ்பிள்ளைகள் இப்படி மகா மோசமாக அவமானமாக எழுதுகின்றார்கள் எனும்பொழுது அன்னார் கட்சியினை கலைத்துவிடலாமா என யோசிக்கின்றாராம்
உண்மையில் எங்கோ அன்னார் கடுமையாக அறை வாங்கியிருகின்றார், கண்டிக்கபட்டிருக்கின்றார்
அள்ளிகொடுக்கும் ஈழதமிழர்கள் கூட ஆமைகறி, அரிசி கப்பலுக்கு பின் முகத்திலோ இல்லை வேறு எங்கோ கிள்ளி வைத்துவிட்டார்கள் என்பது புரிகின்றது
அன்னா உண்மையில் அழுகின்றார், கெஞ்சுகின்றார் ஆனால் அழுகையினை கூட பெரும் பேச்சுபோல் முழங்குவது அவருக்கே சாத்தியம்
அன்னார் 2010களில் எப்படி பேசினார்
“பேசு தம்பி, எழுது. பேச்சும் எழுத்தும் பெரும் ஆயுதம்னு அண்ணன் பிரபாகரன் என்னிடம் சொல்லி இருக்கின்றார்
பேசணும், நிறைய பேசணும். கத்து நல்லா கத்து முதல்ல கண்டுக்கமாட்டான் அப்புறம் கவனிப்பான், அப்புறம் உன் பக்கத்துல வருவான்
எழுது உனக்கு தோணுறது எல்லாம் எழுது. எல்லாத்தையும் எழுது
அடிச்சி வரணும், கலச்சி அடிக்கணும், அடிங்கடா ஏறி அடிங்கடா அண்ணன் இருக்கேன்டா”
இன்று தும்பிகள் ஏறி அடிக்கின்றார்கள் அண்ணன் அழுகின்றார்.
வந்தேறி, ஈனபயல், ஈனபுத்தி , நல்ல அப்பன் ஆத்தா என கீழ்தரமாக பேச சொல்லி கொடுத்ததே அன்னார்தான், எளிய தமிழ்பிள்ளைகளுக்கு அங்கிள் கொடுத்த பயிற்சி அப்படி
ஆனால் பயிற்சியில் தும்பிகள் விளைந்து நிற்கும்பொழுது அன்னாருக்கு கேட்க சகிக்கவில்லை
அதிலும் அங்கிளின் இந்த வரிதான் பெரும் காமெடி
“எனக்கு தெரியாத கெட்ட வார்த்தையா? எனக்கு தெரியாத ஏச்சா? பேச்சா? எனக்கு எப்படி கேட்கணும்னு தெரியாதா?
நான் பேச வேண்டியதெல்லாம் ஏன் நீ செய்ற, உனக்கு வேலை அது இல்ல, ஒழுங்கா இரு இல்லண்ணா போ”
பிரபாகரன் பாலிசி இதேதான், எனக்கு அடிமையானவர்கள் என்னோடு இருங்கள், மீறி ஏதும் பேசினால் கொன்றே விடுவேன்
அப்படி இறுக்கமான அமைப்பை வைத்திருந்தான் பிரபாகரன்
அவன் படத்தை வைத்து அப்படி ஒரு இறுக்கமான கட்சியினை வளர்க்கலாம், அதுவும் தமிழகத்தில் வளர்க்கலாம் என அதே ஸ்டைலில் சைமன் என்றால் என்னாகும்?
பிடித்து வைத்து முதுகில் சூடுபோட்டு விடுவார்கள்.
எல்லோரையும் “ஏய்ய் அவனே இவனே மானங்கெட்டவனே” என குதறும் தும்பிகள் அடுத்து மிக மட்டமாய் திட்டபோவது யாரை தெரியுமா?
நிச்சயம் அங்கிள் சைமனராய்த்தான். விரைவில் அத்தேனோசை நம் எல்லோர் காதுகளிலும் பாயும்
நாம் இப்பொழுது அங்கிளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்
ஏம்பா சைமா, உன் தும்பிகளின் பேச்சை உனக்கே கேட்க முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்
அனால் சாட்சாத் அது உமது பேச்சுத்தான், அப்படியானால் எல்லோரும் உம்மேல் எவ்வளவு கடும் கோபத்தில் இருப்பாகள் என இனியாவது புரிந்துகொள்ளுமய்யா”