நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம்
நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம் என்றால் இதற்காகத்தான்
இதனை நல்ல திராவிடன் உணர்வாளன் கண்டிக்காமல் இருப்ப்பானா?
இதை கண்டிப்பவன் ஆரிய அடிவருடி, இதை ஏற்றுகொள்பவன் எல்லாம் திராவிட போராளி
திராவிட தீயினை பிராமணர் யாரும் அணைக்கவில்லை, எதிரி வடக்கே இருந்து வரவில்லை
இதை கெடுத்தது இவர்களே, ஆனால் இடித்துரைப்பவர் எல்லாம் ஆரிய அடிவருடியாம்
படத்தை கவனியுங்கள், பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஸ்டாலினும் யாரையோ பார்த்து சிரிக்கின்றார்கள்? (பிராமணரை நோக்கியோ)
ஆனால் உதயநிதி மட்டும் நேருக்கு நேர் பார்த்து சிரிக்கின்றார், காரணம் அவரை பார்த்து உலகம் சிரித்துகொண்டிருக்கின்றது
ஆனாலும் படத்தில் ஒரே ஒரு குறை, உதயநிதி ஸ்டாலினின் மகன் படத்தை சேர்த்து போட்டிருக்கலாம், ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை
நேற்று திமுக உறுப்பினர் கூட்டம் நடந்ததாம், மானமுள்ள யாராவது ஒருவர் இருந்திருந்தால் இதனை சொல்லி கண்டித்திருப்பார்கள்??
அங்கிருப்பவருக்கு எல்லாம் கொள்கையினை விட இப்பொழுதெல்லாம் பதவி , வருங்கால பதவி முக்கியம் என்பதால் இதை எல்லாம் சொல்லவில்லை
சொன்னாலும் ஸ்டாலின் கேட்கும் மனநிலையில் இல்லை
ரஷ்ய புரட்சியின் பொழுது ஸ்டாலினின் மகனை சிறைபிடித்தனர் எதிரிகள், மகன் என் .. க்கு சமானம், கொள்கையே முக்கியம் என சொல்லி போராடினார் அந்த போராளி
வரலாற்றில் அவன் நின்றது அப்படித்தான், இந்த ஸ்டாலினிடம் இதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது
வரலாறு எவ்வளவு விசித்திரமானது??
பெரியார், மணியம்மை தன் சொத்துக்கு வாரிசு என்றவுடன் அலறி அடித்து ஓடி திமுக தொடங்கினார்கள்
இன்று திமுக சொத்துக்களுக்கு உதயநிதி வாரிசு என்றவுடன் கொஞ்சமும் சீற யாருமில்லை
பகுத்தறிவு, சுயமரியாதை எல்லாம் சொத்திலும், பணத்திலும், பதவியிலும் அடங்கிவிட்டது
திராவிட கழகம் எப்படி பெரியாரின் பிடிவாதத்தால் சுருங்கியதோ, அதிமுக எப்படி மன்னார்குடி கும்பலிடம் சிக்கி அழிந்ததோ,
அதே அழிவிற்கு திமுகவும் தயாராகிவிட்டது
இந்தியாவினை திரும்பி பார்க்க வைத்த மாபெரும் இயக்கம் ஒரு சிலரின் சுயநலத்தால் அவசரமாக அழிந்து கொண்டிருக்கின்றது.
இப்பொழுது திரை பிரபலங்கள் அரசியலுக்கு வருகின்றார்களாம், அதனால் உதயநிதி ஸ்டாலினின் சேவை அவசியமாம்
என்று சினிமா பிரபங்கள் அரசியலுக்கு வரவில்லை? ராமு, ஜெயா, விஜயகாந்த் என வரிசைகட்டி வந்தபொழுது இவர்கள் எந்த நடிகரை வைத்து எதிர்த்தார்கள்?
இவர்கள் பிரச்சாரத்திற்கு வந்த வடிவேலு என்ன ஆனார்? பாக்யராஜ் எல்லாம் ஏன் ஓடினார்?
உதயநிதி ஸ்டாலின் நடிகர் என்றால் அந்த அருள்நிதி என்பவர் நடிகர் இல்லையா? அவரை எல்லாம் பயன்படுத்தமாட்டார்களா?
குஷ்புவினை விடவா இன்னொரு பெரும் திரைபிரபலம் வருவார்?
அவரை அடித்து விரட்டுவார்களாம், ஆனால் அல்லக்கை நடிகர் உதயநிதியினை உயர்த்தி பிடிப்பார்களாம்
திமுக சொன்ன பொய்களிலே மாபெரும் பொய் இதுதான்
கொஞ்சமேனும் பொருந்த கூடிய பொய்யாய் சொல்லுங்கள்
இப்போதைக்கு நயந்தாரா அரசியலுக்கு வந்தால் மகளிரணி தலைவி பதவியினை கொடுத்துவிடுவார்களா?