நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது
நீங்கள் எம்மை பின் தொடர்பவர் என்றால் சமீபத்தில் நாம் ஒரு விஷயம் சொன்னதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்
மெர்சல் படத்திற்கு பாஜக பொங்கியதை தொடர்ந்து, சிம்பு அவர்களை வம்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் அதன் மூலம் அவர் ஒரு பரபரப்பினை தேடிகொள்ளலாம் என சொல்லியிருந்தோம்
நம்பிய சில நடிகைகளை சிம்பு ஏமாற்றி இருக்கலாம், ஆனால் நம்மை போல அவர் அல்ட்ராசிட்டியில் நம்பிக்கை கொண்ட யாரையும் அவர் ஏமாற்ற மாட்டார்
ஆம், மோடியின் பணமதிப்பு நீக்க பிரச்சினையினை விமர்சித்து அவர் ஒரு பாடல் எழுதி பாடிவிட்டாராம்
அது பரப பரவ பாஜக முகாமில் எல்லோருக்கும் இறுதி சுற்று மாதவனாக முகம் இறுக்கமாகின்றது
ஆனானபட்ட விஜய், தினகரன் என எல்லோரையும் போட்டு அடிக்கும் எங்களிடமே உன் வேலையினை காட்டுகின்றாயே என வரிந்து கட்டுகின்றார்கள், சிம்பு வீட்டுக்கு போலிஸ் காவல் எல்லாம் போட்டாகிவிட்டது
பணமதிப்பு நீக்கம் ஒழிந்து ஒருவருடமாக இருந்த சிம்பு இப்பொழுது ஏன் பொங்குகின்றார்?
நயந்தாராவின் அறம் எனும் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்கின்றார்கள், அதில் சிம்பு பாதிக்கபட்டிருக்கின்றாரோ என்னமோ?
விஷயம் சீரியசாகின்றது
எப்படியோ நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது