நாம் நிச்சயம் திமுக அல்ல
நாம் நிச்சயம் திமுக அல்ல, ஆனால் ஈழவிவகாரங்களில் திமுகவினை சாடுவது சுத்தமாக ஏற்றுகொள்ளமுடியா விஷயம் என்றுதான் பதிவுகளில் சொன்னோம்
நம் பதிவுகளால் பலருக்கு புதிய கோணம் கிடைத்ததாக சொல்கின்றார்கள், அப்படி யாரும் பெற்றிருந்தால் நல்லது
இத்தேசத்தின் குடிமகனாக என்ன சொல்லவேண்டுமோ அதனைத்தான் சொன்னோம்
சிலர் நீ இதனை புத்தகமாக எழுதினால் என்ன? என கேட்கின்றார்கள், இன்றல்ல 2010லே எழுதும் விருப்பம் இருந்தது
ஆனால் அப்படி எழுதினால் உன் வீட்டின் முன் தீகுளிப்பேன் என பகிரங்கமாக மிரட்டினார்கள். கொளுத்துவோம் கொல்வோம் என்றார்கள்
நாம் என்ன? ஆசான் Pa Raghavan என்பவரே பிரபாகரனை பற்றி எழுதிய தொடரை சில சக்திகள் நிறுத்த செய்தன, அவ்வளவு இறுக்கம். அப்படி ஆசான் என்ன சொன்னார் என்றால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றார்
அதற்குத்தான் அந்த குதி குதித்தார்கள்
இப்பொழுது எல்லாம் தளர்ந்துவிட்டது. புலிகள் மீதான பிம்பம் சரியதொடங்கிற்று, சைமனே விரைவில் அடிவாங்குவார் போல் தெரிகின்றது
இனி புலிகளின் உண்மை முகத்தை கிழிக்கும் வகையில் நிச்சயம் புத்தகம் வரும், நிறைய வரும்
வாய்பிருந்தால் ஆசான் Pa Raghavan கூட எழுதலாம்.
ஆனால் நிச்சயம் புலிகளையும் இங்குள்ள போலிதமிழுணர்வு இம்சைகளையும் கண்டித்து புத்தகம் வரவேண்டும்
உள்ளே இருக்கின்றானே பேரரிவாளன், அவர் 1990ல் என்ன செய்தார் தெரியுமா?
சாத்தானின் படைகள் என நளியின் அண்ணன் கும்பலோடு இந்திய ராணுவத்தினை இழித்து இங்கே புத்தகம் அச்சிட்டவர், அந்த கும்பலில் அவரும் ஒருவர்
அப்படிபட்ட கொடூர புத்தகம் வந்த நாட்டில் இன்னும் புலிகளின் கொடுமையினை கண்டித்து புத்தகம் வரவில்லை என்பதுதான் கொடுமை
புலிகளை விமர்சித்து வந்த “முறிந்த பனை” எழுதிய ராஜினியினை கொன்ற புலிகள், இந்திய அமைதிபடைக்கு எதிராக அவசரமாக புத்தகம் எழுதியது மாபெரும் அயோக்கியதனம்
தங்களுக்கு எதிராக யாரும் எழுத கூடாது, ஆனால் நாங்கள் யாரையும் எழுதுவோம் என்ற தலைக்கணம் பிடித்த நிலையில் இருந்தனர் புலிகள்
அந்த அளவு இங்கு ஒரு இறுக்கத்தை தேசவிரோதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள், இனி அது தகர்ந்து
ஒன்றல்ல பல வரட்டும்
“அரக்கர் கூட்டம்”, “திருந்தாத ஜென்மம்”, “சயனைடு கோஷ்டி”, “ஆயுதத்தை காதலித்த மனநோயாளி” என ஏகபட்ட தலைப்புகளில் வரட்டும்
ஒன்றல்ல பல வரட்டும், தும்பி வைரஸ்ஸ்கள் அதனால் முற்றிலும் அழியட்டும்,
காங்கிரசார் ரவுடிகளாம், இந்திரா கொலையுண்டவுடன் சீக்கியரை எல்லாம் கொன்றார்களாம்
சொல்வது யாரென பார்த்தால் தும்பிகள், சில திராவிட வண்டுகள்.
அதே 1400 சீக்கிய வீரர்களை இலங்கையில் கொன்றது புலிகள் என்பது அந்த தும்பிகளுக்கும், திராவிட வண்டுகளுக்கும் தெரியவில்லை ஏனோ தெரியவில்லை
ஆனால் அந்த தும்பிகளும், வண்டுகளும் ராமசந்திரன் செத்தபொழுது தீகுளித்து செத்தவர்களை பற்றியோ இல்லை ஜெயா தீர்ப்பினை ஒட்டி கொளுத்தபட்டு செத்த மாணவர்களை பற்றியோ, மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் கொல்லபட்டவர்களை பற்றியோ மூச் விடாது