நாளை சீனா செல்கின்றார் மோடி

நாளை சீனா செல்கின்றார் மோடி, அங்கு சீன இரும்பு தலைவருடன் பேசபோகின்றார். அமெரிக்காவுடன் சீனா வர்த்தகபோரில் இறங்கியிருக்கும் நேரம் மோடியின் சீனபயணத்தை பல கண்கள் கவனிக்கின்றன என்பதால் இது உலக கவனம் பெறுகின்றது

அப்பக்கம் வடகொரிய தலைவர் முதன் முறையாக தென் கொரிய பிரதமரை சந்திக்க போகின்றார், கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் வரலாற்று பூர்வமான சந்திப்பு இது

அணுகுண்டு, ஏவுகனை என மிரட்டி யுத்தம் தவிர தீர்வில்லை என சொல்லிகொண்டிருந்த வடகொரியா இறங்கி வந்து பேசுவது நல்ல விஷயம்

ஜெர்மனி போல, வியட்நாம் போல கொரியாவும் இணையட்டும், அமைதி செழிக்கட்டும்

அப்படியே பின்னொரு நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணையட்டும், அதற்கு இந்த அரசியல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும்