நாளை (15-3-18) தமிழக பட்ஜெட்

நாளை தமிழக பட்ஜெட் என்கின்றார்கள்

2016ல் 3லட்சம் கோடி எனவும், 2017ல் லட்சம் கோடியாகவும் இருந்த தமிழக அரசின் கடன் 2018ல் எத்தனை கோடி கூடியிருக்கின்றது என்பது இனிதான் தெரியும், நிச்சயம் குறையாது

மாநில அரசு கடும் நிதிசிக்கலில் இருக்கின்றது என்கின்றார்கள், ஜிஎஸ்டி சிக்கல் மத்திய அரசின் நிதி குறைப்பு என அது தடுமாறுகின்றது.

(பதவியினை காப்பாற்ற மத்திய அரசுக்கு குனிந்து நிற்பது. எம்.எல்.ஏ சம்பளத்தை உயர்த்தி கட்சி எம்.எல்.ஏக்களை குளிரவைப்பது என அரசு செய்த காரியங்களால் தமிழக அரசு கடனில் தள்ளாடுகின்றது)

இதனால் அரசுக்கு வருமானம் ஈட்ட கடும் நடவடிக்கை இருக்கலாம் என்கின்றார்கள்

கடும் நடவடிக்கை என்றால் ஜெர்மனும் , சிங்கப்பூருமா வந்து தொழில் தொடங்கும்?

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மதுக்கடை, மணல், கல்குவாரி இன்னபிற‌

இதனால் இம்முறை மதுக்கடை தனியாருக்கு செல்லும் வாய்ப்பு உண்டு என்கின்றார்கள். மணல் , கல், தாதுமணலை எல்லாம் அரசே நடத்துமாம்

முன்பு இப்படித்தான் ஆற்றுமணலை அரசு அள்ளும் ஆனால் கிரானைட் குவாரி தாதுமணல் குவாரி எல்லாம் தனியார் நடத்தும் என்ற அறிவார்ந்த அறிவிப்பினை எல்லாம் செய்தார்கள்

இம்முறை எப்படி குழப்புவார்களோ தெரியாது, இதற்கிடையே லாட்டரி சீட்டை கொண்டுவந்து வருமானத்தை பெருக்கும் பெரும் திட்டமும் உண்டாம்

ஆக தமிழகம் எவ்வளவு சீக்கிரம் அழியபோகின்றது எனும் விஷயம் நாளை பட்ஜெட்டில் வரும்

ஒரு விஷயம் புரிகின்றது

நாம் மானியத்தை குறைப்போம், ஒரு உதவியும் செய்யவேண்டாம் தமிழக அரசு தடுமாறட்டும், தமிழக மக்களே பொங்கி எழுது தமிழக அரசினை ஒழிக்கட்டும் என்ற சிந்தனைக்கு மத்திய அரசு வந்திருக்கலாம் என்ற மெல்லிய ஓசை கேட்கின்றது

 
 
LikeShow More Reactions

Comment