நிச்சயமாக கமலஹாசன் கலக்கல் தமிழன்… இன்னும் பிற…

சு.சாமி தமிழ்பொறுக்கி தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டிருப்பதற்கு மிக சரியான பதிலை கமலஹாசன் சொல்லியிருந்தார்

“ஆம், நாங்கள் தமிழ்பொறுக்கிகள். உங்களை போல டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல”

இப்படி நெற்றியில் அடித்து சொன்னபிறகும் இந்த சு.சாமி இன்னும் தமிழ்பொறுக்கி, தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டே இருக்கின்றார்

இவரை அடக்க அழகான வழி உண்டு

ராஜிவ் கொலைசதியினை மீண்டும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலே போதும், அன்னார் அடங்கிவிடுவார்

கடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ராஜிவிற்கான கருப்பு பூனை பாதுகாப்பினை இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் விலக்கினார், அதன் மூலம்தான் தனு ராஜிவினை கொல்லமுடிந்தது

ஏன் அப்படி விலக்கினார்? யாருக்கு சிக்னல் கொடுத்தார் என்பது மர்மம்

ஆக தமிழ்பொறுக்கிகள் செய்யவேண்டியது, ராஜிவ் கொலைவழக்கு சதியினை மீண்டும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கை வைப்பதே

எப்படி விசாரித்தாலும் புலிகள் கூலிப்படைதான், வேலூர் சிறைவாசிகள் எல்லாம் நிச்சயம் குற்றவாளிதான் ஆனால் ஒழுங்காக விசாரித்தால் சு.சாமி சிக்குவது மகா உறுதி..

கூடவே வை.கோவும் சிக்குவது உறுதி, ஜெயலலிதா ஏன் ராஜிவோடு மேடையேறவில்லை என்ற மர்மம் மட்டும் கலையாது, அவரை எழுப்பவா முடியும்?

பொறுக்கித்தனம் என்றால் என்ன? கொழும்பில், லண்டனில், அமெரிக்காவில், டெல்லியில், சந்திரசாமி ஆசிரமத்தில் இவர் “பொறுக்கியது” எப்படி என்பதெல்லாம் அப்பொழுதுதான் தெரியவரும்…

நிச்சயமாக கமலஹாசன் கலக்கல் தமிழன் தான்

“ஆம், நாங்கள் தமிழ்பொறுக்கிகள். உங்களை போல டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல…”


கச்சத்தீவை தாரைவார்த்தது கலைஞர் – விஜயகாந்த்

இந்திரா காந்தி என்றொருவர் இருந்தது கூட இவருக்கு தெரியவில்லை, இப்படியும் ஒரு வெள்ளந்தியான மனிதரா?

இவரையா கூட்டணி என்ற பெயரில் ஏமாற்றினார்கள்?

கலைஞரோடு சேர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 20 எம் எல் ஏக்களோடு எப்படி வளைய வந்திருப்பார்.
சட்டசபை களபேரத்தில் நாக்கை துருத்தியிருந்தால் சபை அரண்டிருக்கும்..

கூட்டணி என்ற பெயரில் இப்படி அரைபைத்தியம் லெவலுக்கு வந்துவிட்டாரே, அய்யோ பாவம்…

“இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா.. “


 பாத்திமா பாபுவினையும், லதாவினையும் “பத்தினி தெய்வங்கள்” என நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டதால் சர்ச்சை

நாஞ்சில் சம்பத்தின் நாக்கு உளற ஆரம்பித்து நெடுங்காலம் ஆயிற்று, அதுவும் ஜெயா மறைந்தபின் மனிதரின் மூளையே மளுங்கிற்று

அவர் உளரட்டும், ஆனால் பதிலுக்கு பதில் செவிட்டில் அடித்தாற் போல சொல்லமுடியாத நிலையில் லதா சிக்கிகொண்டார்

அந்த .. மட்டும் பத்தினி தெய்வமா? என கேட்டுவிட முடியாத நிலையில் பாத்திமாவும், லதாவும் சிக்கிகொண்டதுதான் பெரும் சோதனை

உண்மையினை வெளிசொல்லமுடியாத இம்மாதிரியான இக்கட்டு யாருக்கும் வரகூடாது, பரிதாபம்..