நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் கொடூரம் இது
மாட்டுக்கு ஆண்மை நீக்கம் செய்து விவசாய பணிகளை செய்யவைப்பது போல ஒரு கொடுமை மனிதர்களுக்கும் மகாராஷ்டிராவில் நடந்திருகின்றது
அதாவது பெண்களுக்கு கருப்பையினை நீக்கிவிட்டு ஒரு இயந்திரம் போல மாற்றி ஒரு கும்பல் பயன்படுத்தியிருகின்றது
கருப்பை இழப்பால் வரும் விளைவுகள் பற்றியோ இதர பலவீனம் பற்றியோ அறியா அப்பாவி பெண்களும் அதில் சிக்கியிருக்கின்றனர்
நிலசுவாந்தார்கள் இன்னும் பலரின் கொடுமையான சிந்தனையில் உதித்த அத்திட்டம் இந்த நாகரீக உலகில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது
நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் கொடூரம் இது
விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது, மிக மோசமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன
இந்த நாடு இன்னும் செல்லவேண்டிய தூரம் ஏராளம் இருக்கின்றது