நிபா எனும் வைரஸ்
இந்த நிபா எனும் வைரஸ் கேரளாவில் பரவ ஆரம்பித்து சிலரை கொன்ற விஷயம் உலக அளவில் எதிரொலிக்க ஆரம்பித்தாயிற்று, இவ்வகை காய்ச்சலுக்கு மருந்து இன்னும் இல்லை என்பதுதான் பதற்றத்திற்கு காரணம்
பல நாடுகள் கொச்சிக்கு விமானம் அனுப்புவதை தடுக்கலாமா? கொச்சி கப்பல்களை அவசரமாக கிளப்பலாமா என யோசிக்கின்றன
இந்த நிபா என்பது வவ்வால்களிடமிருந்து பரவும் வைரஸ். அதற்காக வவ்வால் வந்து ஒவ்வொருவருக்கும் பரப்பாது. எங்கோ உருவாகும் கிருமிகள் சில மனிதர்களிடம் விஸ்வரூபமெடுத்து கொலையாளி ஆகின்றன
வவ்வால்கள் எச்சில்படிந்த பழங்களில் இருந்து பரவியிருக்கலாம் என்பதால் கடிபட்ட பழங்களை கேரளாவில் பார்த்து பயன்படுத்தும்படி கேட்டுகொள்கின்றார்கள்
இது முன்பு வியட்நாம், மலேசிய காட்டுபகுதியில் தென்பட்டது, பின் காணாமல் இப்பொழுது திடீரென கேரளாவில் வந்துவிட்டது.
கேரளாவில்தானே என தமிழகம் அசட்டையாய் இருக்க முடியாது. அனுதினமும் ஏகபட்ட பேருந்து, ரயில், லாரி என அங்கிருந்து இங்கும்,, இங்கிருந்து அங்கும் சென்றுகொண்டே இருக்கின்றன என்பதால் நிபா நொடியில் பரவும்
போக்குவரத்து பெருகிவிட்ட காலமிது என்பதால் எங்கும் அந்த அபாய வைரஸ் பரவலாம்
பாதிக்கபட்டவர்களை தனிமைபடுத்தினாலே காய்ச்சல் கட்டுக்குள் வரும் என்கின்றார்கள். ரத்தம், வியர்வை, சளி மூலமே பரவும் வகை இது
கேரள அரசு முழு விழிப்பு நிலையில் இருக்கின்றது
பொதுவாக எந்த கொள்ளை நோயும் காலம் காலமாக நிற்காது, வந்த வேகத்தில் ஆட்டம் போட்டு தானாக அடங்கும்
காலம் காலமாக இதுதான் நடக்கின்றது, ஆண்டவன் அப்படி அதற்கும் ஒரு கணக்கு வைத்திருகின்றான். கிருமிகள் பலகி பெருகும்பொழுது பலமிழக்கின்றன என்கின்றது விஞ்ஞானம்
ஆனாலும் முதலில் அது வீரியமாக ஆடும் என்பதால் மிகுந்த கவனம் தேவை, சிக்கினால் அவ்வளவுதான்
இந்த நிபா ஆபத்தும் விரைவில் நீங்கும் என்றாலும் மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது
கொசு மூலம் பரவாதுதான், ஆனால் தெருவில் எச்சிலுக்கும் இன்னும் பல கழிவுகளுக்கும் குறைவில்லா பகுதி நமது பகுதி என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை
(சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான், அக்காய்ச்சல் வவ்வால் கொண்டு வரும், அப்படி வந்தால் அவன் தலைகீழாய் தொங்குவான், வெறி நாய்கடி போன்றது என பயமுறுத்துகின்றான்
அப்படி எல்லாம் அல்ல. ஒருவனை பாதித்தவுடன் கையினை தூக்கி கொண்டு உறும அது என்ன தமிழக தும்பி வைரசா??
தும்பி வைரஸ் என்பது வேறு, அதற்கு சிகிச்சை எனபது பாதிக்கபட்டவன் முதுகில் மட்டையால் 4 சாத்து சாத்துவது. அவ்வளவு போதும் தும்பி வைரஸ் ஓடியே விடும்)
