நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது நம் நாடு

No automatic alt text available.

ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது

ஏவுகனைகளில் பல வகைகள் உண்டு, பட்டனை தட்டியவுடன் பறந்து சென்று விழுவதெல்லாம் 1960ம் ஆண்டுகால ஸ்டைல்

இப்பொழுது ஏவுகனை தடுப்பு சாதனம், எதிர்ப்பு கனை என பலதரபட்ட விஷயம் வந்தபின் நவீன ஏவுகனைகளுக்கு காலம் மாறிகொண்டிருக்கின்றது

நிர்பாய் அந்த வகை, அதாவது எதிரி ரேடாரில் சிக்காமல் நிலமைக்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி செல்லும் வகையறா.

அதாவது மற்ற ஏவுகனைகள் காமராஜர், நல்லகண்ணு போல என்றால், நிர்பாய் கலைஞர் போல சாதுர்யமாக மாறிகொள்ளும்.

கொஞ்சம் சிக்கலான ஏவுகனை வகைதான். அமெரிக்காவின் டொமஹாக் , ரஷ்யாவின் டெல்டா வகை

இது சப்சோனிக் குரூயிஸ் வகை என்பதால் வீச்சும் அதிகம், உலகின் மிக சில நாடுகளிடம்தான் உண்டு, அவ்வரிசையில் இந்திய திருநாடும் இடம்பிடித்துவிட்டது

கடந்த 4 முறை சோதிக்கபட்டாலும், நேற்றைய 5ம் கட்ட சோதனை மகா வெற்றியினை கொடுத்திருக்கின்றது

நிர்பாய் என்றால் பயமில்லை என்ற பொருளில் வரும், இந்த ஏவுகனை வெற்றிபெற்றிருப்பதால் இனி இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு

இதற்காக உழைத்த எல்லா விஞ்ஞானிகளுக்கும் சல்யூட்

வந்தேமாதரம்

(இப்பொழுது பாகிஸ்தானின் தூக்கம் தொலைந்திருக்கும், ஏதாவது ஒரு மொக்கை ஏவுகனையினை சீனாவிடமிருந்து வாங்கி அதற்கு கஜினி, கோரி, பாபர் என பெயரிட்டு சோதிக்க கிளம்பியிருக்கும்)