நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர் : சந்தோஷ் நாராயணன்
நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர், ஆஸ்திரேலியா சென்ற இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இங்கு தலித், அது இது என ரஞ்சித் என்பவரோடு முழங்கிகொண்டிருந்த அன்னாருக்கு உலகம் இப்பொழுதுதான் விளங்குகின்றது போல
வெள்ளையர்கள் அப்படித்தான், தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. இன்னொன்று பாதுக்காப்பு காரணங்களில் அவர்கள் ஆசியர்கள் என்றால் கூடுதலாக சோதிப்பார்கள்
ஆனானபட்ட கலாமே அவர்களிடம் தப்பவில்லை எனும்பொழுது இவர் என்ன பெரிய விஷயமா?
இவர்களுக்கு என்ன சிக்கல்? இங்கிருந்தால் தலித்தினை அங்கீகரிக்கவில்லை என புலம்பல், வெளிநாடு சென்றால் கருப்பாய் இருப்பதால் விரட்டுகின்றார்கள் என புலம்பல்
உண்மை ஒரு காலமும் விளங்காது , மாறாக தங்கள் சுய அடையாளத்தை புலம்ப பயன்படுத்திகொள்வது இவர்கள் பாணி
இங்கு ஆண்ட சாதி, அடிமை சாதி என சொல்லிகொண்டாலும் எல்லோரும் சூத்திர சாதியே
அப்படி இங்கு என்ன புரட்சி பேசிவிட்டு வெள்ளையனிடம் சென்றால் அவனுக்கு எல்லோரும் ஆசிய கருப்பனே
அங்கு அம்பேத்கர் படம், கொள்கை எல்லாம் வேலைக்கு ஆகாது, அது உள்ளூர் அரசியலுக்குத்தான் சரி
அவர்களுக்கு லெனினும் ஸ்டாலினும்தான் சரி.
அது இருக்கட்டும், அப்துல் கலாமினை இப்படி அமெரிக்காவில் சோதித்தபொழுது , பெரும் சர்ச்சை வந்தபொழுது கலாம் ஏதும் சொன்னாரா?
ஒருவார்த்தை கருப்பன் என்பதால் என்னை இம்சை செய்தார்கள் என சொன்னாரா?
அதுதான் மேன்மக்கள் என்பது
(இதற்கும் வைகோ மலேசிய விமான நிலையத்தில் திருப்பி அனுப்பபட்டதற்கும் முடிச்சி போட கூடாது, வைகோ கருப்பர் என்பதால் அனுப்படவில்லை, குசும்பர் என்பதால் மட்டுமே நிறுத்தபட்டார்)