நிலத்தடி நீர் வரம்பு
நிலத்தடிநீரை வரம்பு மீறி உறிஞ்சி வற்றச் செய்வதைத் தடுக்கவும், நிலத்தடிநீர் பயன்பாட்டுக்கு ஒழுங்காற்று முறைமை வலுவாக ஏற்படுத்தவும் ‘தண்ணீர் காப்புக் கட்டணம்’ விதிக்க உத்தேசித்திருக்கிறது மத்திய அரசு.
ராணுவத் தேவை, விவசாயத் தேவை, வீடுகளின் குடிநீர்த் தேவை ஆகியவற்றுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் அது முடிவு செய்திருக்கிறது
நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம் இது
ஆனால் விடுவார்களா?
“என் நிலத்து நீரை எடுக்க உனக்கு ஏன் வரி? அணை கட்டினாயா? நீர்மட்டம் உயர்த்தினாயா? குளத்தில் நீர் தேக்கினாயா? ஒருகுடம் தண்ணீர் சேர்த்தாயா மானம் கெட்டவனே..” என கிளம்பிவிடுவார்கள்
நிலத்தடி நீர்மட்டத்தை காக்க சட்டமியற்றுவது நல்லது,
அதே நேரம் அந்த நீர்மட்டம் உயர அணைகள், தடுப்பணைகளை பெருக்குவதும், குளங்களை தகுந்த முறையில் பராமரிப்பதும் மிக முக்கியம்
மணற்கொள்ளையினை தடுப்பதும் மகா அவசியம்
அதை முறையாக செய்தாலே நிலத்தடி நீர்மட்டம் தானாக உயரும்