நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்
அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்
சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள்
வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று
அது இட ஒதுக்கீடு அது இது என வந்து கல்விக்கும் வந்தது, யாழ்பாண மாணவன் பெரும் மதிப்பெண் குவிக்க வேண்டிய இடத்தில் சிங்களன் குறைவாக எடுத்தால் போதும்
இது அநீதி என்றால் இந்தியாவில் பிராமண இனத்திற்கு இழைக்கபட்டதும் அநீதியே
சிங்களனை இவ்விஷயத்திற்கு குற்றம் சாட்டினால் இந்திய அமைப்பையும் சாடி தீர்க்க வேண்டும்?
ஆனால் யாராவது சொல்வார்களா?
இந்தியாவில் இட ஒதுக்கீடு உரிமையாம், செய்தே தீரவேண்டுமாம், ஆனால் சிங்களன் செய்தால் அது தமிழின அழிப்பாம் , கொடுமையாம்
அங்கு போராட வந்த மாணவர்கள் திசை திரும்ப, அவர்களுக்கு ஆதரவாக கடத்தல், கொள்ளை கும்பல்கள் களமிறங்க, அந்த போராட்டம் அப்படியே குண்டர் கும்பலிடம் சென்றது
இந்த கும்பல்களை தங்கள் சுயலாபத்திற்காக வரவேற்று பயன்படுத்தி வாங்கிகட்டிகொண்டனர் ஈழதமிழ் அரசியல்வாதிகள்
அங்கும் ஏராளமான குண்டர் கும்பல்கள் இருந்தன, அக்கும்பல் ஒன்றில் சிறுவயதிலிருந்தே வளர்ந்தவர் பிரபாகரன்
பின் அவரின் போராட்டமும் குண்டர் கும்பலுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் நடந்த “கேங்க் வார்” போலவே நடந்து முடிந்தும் விட்டது
ஈழபோராட்டம் தொடங்கிய விதமும், முடிந்த விதமும் இதுதான்
சிங்களன் கொடுமை என சொல்லவரும் முன் அங்கிருந்த நிலையினை பாருங்கள்
இங்கு பிராமணர் இடத்தில் ஈழதமிழரும், சிங்கள இடத்தில் மற்ற சாதியினரும் இருந்தார்கள். கல்வியால் வாழ்ந்த யாழ்பாணம் பொங்கி எழ போராட்டம் வெடித்தது
இங்கு பிராமணாள் ஒரு சத்தமுமில்லை, அவர்கள் கத்தவும் மாட்டார்கள் அதனால் இங்கு அமைதி
இலங்கையில் எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கிடைக்க்க வெண்டுமாம், ஆனால் இந்தியாவில் மட்டும் பட்டியல் போட்டு அடிப்பார்களாம், அது புரட்சியாம்
இட ஒதுக்கீட்டை சிங்களன் செய்தால் கொடுமை எனவும், இங்கு நடந்தால் புரட்சி எனவும் சொல்லிகொள்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்