நீட் : இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று
நீட் தேர்வுக்கு மகனுக்கும் மகளுக்கும் துணையாக சென்று இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று
நிச்சயம் இது எதிர்பார்க்க முடியா மரணம், நீட் தேர்வால் இறந்தார்கள் என எப்படி சொல்லமுடியும்? அதுவும் மதுரையில் இறந்தவருக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த தேசத்திற்காக சமரசம் பேச சென்று ரஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் சாஸ்திரி
இந்திராவின் அடக்குமுறையால் மனம்நொந்து காந்தி சிலைக்கு மாலையிட்டு மாரடைப்பால் செத்தார் காமராஜர்
ஈழவிவகாரத்தில் தலையிட்டதற்காக இங்கு கொடூரமாக கொல்லபட்டார் ராஜிவ் காந்தி
அதை எல்லாம் சர்வ சாதாரணமாக கடந்து சென்ற தமிழக கட்சிகள், இப்பொழுது அதே மாதிரி எதிர்பாரா சாவுகளை கொண்டு அரசியல் செய்ய முயல்வது பார்க்க சகிக்கா விஷயம்.
அதுவும் இம்மாதிரி பத்திரிகைகள் என்பது தமிழகத்திலிருந்தே விரட்டபட வேண்டிய விஷயம்
தமிழகத்தை தமிழை கெடுத்ததில் பெரும் பங்கு கொண்ட சுயநல தினதந்தி இன்னும் திருந்தியதாக தெரியவில்லை
தமிழகத்தில் எல்லோரும் குருவியார் பதில்கள் எனும் தினதந்தி பக்கத்தில் கேள்வி கேட்கும் கேணையர்கள் என்றே அது நினைத்து கொண்டிருக்கின்றது