நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன?
நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன? என்பது இன்னொரு விஷயம்
ஆனால் பாதகம் என சொல்லபடும் விஷயங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பே இல்லை, எல்லோரும் முணுமுணுக்கின்றார்களே தவிர போராட யாருமில்லை
உண்மையில் தமிழகத்திற்கு இன்று வழிகாட்டவோ அல்லது அதிரடியாக குரலெழுப்பி மக்களை திரட்டவோ யாருமில்லை, இது நிச்சயம் வீழ்ச்சி, மாபெரும் வீழ்ச்சி.
எவ்வளவு பெரிய மகத்தான போராட்டங்களை நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழகம், இப்படி ஒரு மானமுள்ள அல்லது உணர்ச்சியுள்ள தலைவன் இல்லாமல் இப்படியாயிற்று என்பதுதான் சோகம்
அப்படி அடுத்த தலைவனை உருவாக்காத வேலையினைத்தான் இக்காலம் வரை அந்த உணர்ச்சி அலையில் எழும்பிய தலைவர்கள் செய்திருக்கின்றார்கள்
டிஎம்.நாயர், தியாகராஜர் என் எழும்பிய அலை, பன்னீர் செல்வம் என்றெல்லாம் பரவிய அலை, பெரியார், அண்ணா, கலைஞர் என் பற்றி எரிந்த அந்த தமிழகம் இன்று அமைதியாய் கிடக்கின்றது
சில காரணங்கள் சொல்லலாம், பெரியாருக்கு பின் அவரின் கழகத்தார் அவரின் சொத்துக்களை மட்டும் காத்தது, அண்ணாவிற்கு பின் கலைஞர் எழுந்தாலும் தனக்கு அடுத்து நல்ல தலைவனை உருவாக்க தவறியது, எம்ஜிஆர் தலைவனான கொடுமை நிகழ்ந்தது, வைகோவின் கூடா நட்பு என பலகாரணங்களை சொல்லமுடியும்
மிக சுருக்கமாக சொன்னால், பெரியார் பலரை உருவாக்கினார், அண்ணா பலரை கைதூக்கிவிட்டார், அவர்களுக்கு பின் வந்த எல்லோரும் அந்த காரியத்தை செய்யவே இல்லை. அதில் கலைஞரும் உண்டு
இந்த குற்றசாட்டினை யாரும் மறுக்கமுடியாது, கலைஞராலும் முடியாது. நிச்சயம் இது அவரின் வரலாற்று பிழை
ஆக இந்த வீழ்ச்சியில் இந்தி முதல் நீட் வரை வந்துவிட்டது, தமிழிசை முதல் எச்.ராசா வரை குத்தாட்டம் ஆடுகின்றார்கள்
எல்லாம் காலத்தின் கோலம்
நீட் தேர்வில் மத்திய அரசு தமிழகத்தில் பல்ஸ் பார்த்துவிட்டது, வெற்றி அவர்களுக்கு மாபெரும் வெற்றி
இந்த வெற்றியில் இனி பல அதிரடி திணிப்புகள் நிச்சயம் நடக்கும், மாற்றியமைக்கபட்ட கல்வி திட்டம் மிக விரைவில் அமலாகும்
என்ன செய்யும் தமிழகம்? ஒரு மணாங்கட்டியும் செய்யாது. இங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீ அணைந்துவிட்டது, இனி பற்றவைக்கவும் யாரும் இல்லை , பற்றவைத்தாலும் பற்றிகொள்ளவும் தமிழருக்கு சிந்தனையிலை
நீட் தேர்வு தகுதிபெறும் தேர்வுதான் மற்றபடி தமிழக இட ஒதுக்கீட்டினை அது பாதிக்காது என்றெல்லாம் சப்பைகட்டு கட்டுகின்றார்கள்,
நீட் தகுதிபெறவில்லை என்ற ஒரு சொல்லில் அவர்களை விரட்ட எவ்வளவு நேரமாகும்?
என்னமோ புரிந்தும் புரியாமலும் நடக்கின்றது, முழு விவரமும் யாரும் சொல்லவுமில்லை. மறுப்பவர்களும் அதன் முழு பாதகம் எது என சொல்லவே இல்லை..
கொஞ்சம் சரிதான் ஆனால் தவறு என்பதுபோலத்தான் அணுகி, முணகிகொண்டிருக்கின்றார்கள். உண்மையும் அதுதான்
நிச்சயமாக மருத்துவம் புனிதமான தொழில், தமிழகத்தில் பணம் கொடுத்தால் மெடிக்கல் சீட் அல்லது சாதி பின்புலத்தில் மெடிக்கல் சீட் என்ற நிலை இருக்கின்றது, இந்த இரண்டும் ஒழிந்தால் சரி
அது மருத்துவத்தில் மட்டுமல்ல, முக்கியமான எல்லா படிப்புகளுக்கும் வேண்டும்,
“மருத்துவத்திற்கு நாடு முழுக்க ஒரே தேர்வு என சொல்லிட்டேள், இந்த பொறியில படிப்பிற்கு எப்போ நாடு முழுக்க ஒரே தேர்வு வைக்க போறேள்…., அப்படி ஐடியா ஏதும் உண்டா?”
முதலில் நாடு முழுக்க இந்த அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரே மாதிரியான NEAT தேர்வு நடத்தபடவேண்டும்
அந்த தேர்வில்தான் இந்தியா CLEAN ஆகும்…
‘நீட்’ தேர்வு எழுதியவர்களிடம் கடுமையான சோதனை இடிஅமீன் ஆட்சியில் வாழ்கிறோமா?: திருநாவுக்கரசர்
முன்பு “பூலன் தேவி” அல்லது “எமல்டா மார்கோஸ்” ஆட்சியில் இவர் தமிழகத்தில் வாழவில்லையா? அப்பொழுதெல்லாம் ஏதாவது கேள்வி எழுப்பினாரா?