நீதிநெறி விளக்கம் : 69
நீதிநெறி விளக்கம் : 69
“சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்
பெறுமெனிற் றாழ்வரோ தாழார் – அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஒண்மையிற் றீர்ந்தொழுக லார்”
அதாவது ஒரு சிறிய செயலால் சிறிதளவே பயன் எனும்பொழுது அதை செய்வதால் அறிஞர்களுக்கு தாழ்வா என்றால் அது தாழ்வல்ல
அறம் கெட்ட வழியில் மாபெரும் சாதனைகளை செய்வதை விட அறமான வழியில் செய்யும் மிகசிறிய செயல் பெரும் புகழையும் செல்வாக்கையும் அறிஞர்களுக்கு பெற்றுதரும என்பது பாடலின் பொருள்
இதனை இன்னும் ஆழமாக விளக்க வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம்
வள்ளுவன் வாழ்ந்த காலத்தில் பெரும் அரசன் இருந்தான், இன்னும் பணமும் செல்வமுமே பிரதானம் என எண்ணிய செல்வந்தர்கள் இருந்தார்கள், இன்னும் பெரும் பராக்கிரமசாலிகளும் பலரும் இருந்தார்கள், அப்பொழுது ஒரு ஓரமாக இருந்து குறளை எழுதிகொண்டிருந்தான் வள்ளுவன், அது சிறுமுயற்சி
ஆனால் இன்று வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அரசனோ, செல்வந்தரோ யாருக்கும் தெரியாது, வான்புகழ் கொண்ட வள்ளுவனை தெரியும்
வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஆயுதம் ஏந்தியும் இன்னும் பல வகையிலும் பலர் மிரட்டி கொண்டிருக்க வெறும் காகிதத்தில் கவிதையாகவும் கட்டுரையாகவும் எழுதிகொண்டிருந்தான் பாரதி, இன்று அவன் வரலாற்றில் நிற்கின்றான்
ஒரு ஏழை காவி சன்னியாசியின் புலம்பல் எங்களை என்ன செய்யமுடியும் என விவேகானந்தரை ஏளனமாக கண்டான் வெள்ளையன் ஆனால் அந்த சன்னியாசி செய்த புரட்சித்தான் இன்று மோடியினை கொடுத்திருக்கின்றது