“நீயா நானா” நிகழ்ச்சி
கலைஞர் இறந்து கிடைத்த அனுதாப நேரத்தை அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றது விஜய் டிவி
“நீயா நானா” நிகழ்ச்சி இப்பொழுது போரடித்து விழுந்து போனதை கலைஞர் எனும் மனிதரின் நினைவுகளை கொண்டு தூக்கி நிறுத்திற்று
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை இனி செத்தும் கொடுத்தார் கலைஞர் என மாற்றிகொள்ளலாம்
ஆனால் ஜெயா இருந்தவரை இம்மாதிரி நடத்தாத டிவி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றது
ஒருவேளை அம்மணி இருந்திருந்தால் என்னாகும்?
பிக்பாஸ் மேல் சமூக அக்கறை வழக்குகள் சில பாய்ந்திருக்கும், ஜெயாவும் விஜய்டிவியிம் திரைமறைவில் நீனா? நானா? நடத்திகொண்டிருப்பார்கள்
ஆனால் ஒரு விஷயம் பாராட்டதக்கது
கலைஞரை பொது மேடையில் பேசுகின்றார்கள், திமுக அமைதியாக பார்க்கின்றது, தொண்டர்களும் ஆழ்ந்த அமைதி
இது தமிழகத்தில் வேறு எந்த தலைவனுக்காவது சாத்தியமா? என்றால் இல்லை
ஜெயா, ராமசந்திரன் என யாரையாவது இப்படி இழுக்கமுடியுமா , பேசமுடியுமா? என்றால் முடியாது, காரணம் தலமைபதவி அவர்களுக்கு ஒரு வகையான அரச கிரீடம்
கலைஞர் பெரும் தலைவராயினும் சாதாரண மக்களில் அவர்களோடு ஒருவராக வாழ்ந்திருக்கின்றார் என்பதை எப்படி மறுக்க முடியும்?
நிகழ்ச்சி அதனைத்தான் நிரூபித்து கொண்டிருக்கின்றது.