நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா?

என்னிடம் வந்து நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா, துரோகி , யூதாஸ் என சிலர் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

இந்த பரந்த உலகினையும், அதில் வாழும் எல்லா மக்களையும் எங்கோ மேற்காசியாவில் வாழ்ந்த மிக சிறுபான்மை இனத்தின் பைபிள் பைபிள் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌

இஸ்ரேலிய யூதனுக்கு அவன் புத்தகம் கொடுத்த கட்டளைகளை, எங்கோ மூலையில் இருக்கும் தமிழனாகிய நான் பின்பற்றவேண்டுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌

எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு, அந்த மதங்களில் நல்ல கருத்துக்களும் அறிவிலும் உண்டு, அவற்றை எல்லாம் கண்டிப்பாய் படிக்கவே கூடாது, நீ பைபிள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌

எதற்கெடுத்தாலும் பைபிள், என்ன சொன்னாலும் பைபிள் என பழைய ஏற்பாட்டு யூதனும் பின்னர் பவுல் முதலான யூதனும் எழுதிய எழுத்துக்களை தூக்கிபிடித்தால்தான் நான் கிறிஸ்தவன் என்றால் நான் கிறிஸ்தவனே அல்லாமல் போகட்டும்

எத்தனை ஆயிரம் புத்தகங்களும், தத்துவங்களும் உலகெல்லாம் கொட்டி கிடக்கின்றன, நான் ஏன் யூதனின் புத்தகத்தை மட்டும் சுமக்க வேண்டும்?

நிச்சயமாக பைபிள் என்பது யூதனின் வரலாற்று நூல், அவனின் தத்த்துவ நூல், அவனின் வரலாறு அறிய வேண்டுமென்றால் படியுங்கள்

ஒரு வரலாற்று நூல்தான் வாழ்க்கை தத்துவம் என்றால் வாழமுடியுமா? அதனை தவிர ஏதும் படிக்க கூடாது என்றால் வேறு எந்த வரலாற்றை படிக்க போகின்றீர்கள்?

கிணற்றுதவளை என்பது சாட்சாத் நீங்கள்தான்..

அப்படி மூளைசலவையில் சிக்கி இருந்தால் நீங்கள் கிறிஸ்தவனாகவே இருங்கள்

என்னை வந்து கேட்க என்ன இருக்கின்றது, ஒரே ஒரு கடவுளை இவ்வுலகத்தில் ஒவ்வொரு இனமும் அதற்கு தகுந்தாற்போல் புரிந்து வைத்திருக்கின்றது

அப்படி இயேசு எனும் அவதாரத்தை என் சிற்றறிவுக்கு எட்டினாற்போல் புரிந்துகொள்கின்றேன் போதுமா?

அதனை என்றோ யாருக்கோ கடவுள் எதற்கோ சொன்ன வார்த்தைகளை என்னிடம் வந்து சம்பந்தமே இல்லாமல் நீங்கள் ஏன் சொல்லவேண்டும்?

முதலில் யூதனின் புத்தகத்தின் மூலம் உலகினை பார்க்கும் தன்மையினை தூக்கி எறிந்துவிட்டு, உங்கள் சொந்த புத்தியில் (அப்படி ஒன்று இருந்தால் ) உலகினை பாருங்கள்

கொஞ்சமாவது உங்களால் அமைதி நிலவும்

யூதனாலே இவ்வுலகில் ஒருநாளும் அமைதி நிலவாது, அது அமைதிக்கான் இனமே அல்ல, அப்படி இருக்கும்பொழுது அவன் எழுத்துக்களை தூக்கி திரியும் நீங்கள் எப்படி இந்த சமூகத்தை அமைதியாக இருக்கவிடுவீர்கள்??

சமூகத்தை விடுங்கள், என்னை அமைதியாக இருக்க விடுங்கள்…