நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் எனக்கே வெட்கமாகவும் அச்சமாகவும் இருகின்றது

நானும் ஏதோ எழுத்தாளன் போல பல நண்பர்கள் புத்தகம் எல்லாம் அனுப்பி வைத்து உதவிகொண்டிருக்கின்றார்கள்

சமீபத்தில் சரவணன் எனும் நண்பர் அனுப்பியிருந்தார் அதனை வாசித்து முடிக்கும் முன் கு.பா.இளங்கோவன் எனும் பெரியவரும் சில புத்தகங்களை அனுப்பியிருந்தார்

ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் உணவோ நீரோ கூட அருந்தாமல் மூழ்கிவிடுவது வழக்கம், குஷ்பூவே வந்தாலும் பார்க்க தோன்றாது

ஆனால் கு.மா.பா இளங்கோவன் அவர் தந்தையின் பாடல்கள் என அனுப்பியிருக்கும் புத்தகம் சில பக்கங்களுக்கு மேல் நகர விடாமல் சிந்தனையினை திருப்புகின்றது

அவர் தந்தை கு.பா பாலசுப்பிரமணியம் எவ்வளவு பெரும் கவிஞராக இருந்திருக்கின்றார் என்பது அப்படி அதிர்ச்சி அளிக்கின்றது

தமிழக எஸ்டேட்டுகளும் பங்களாவும் எல்லாம் சசிகலா வம்ச‌ சொத்து என்பது போல எல்லா பழம் பாடலும் கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன், பட்டுகோட்டைக்கு சொந்தம் என்றே எண்ணியிருக்கினது தமிழகம்

ஆனால் காலத்தால் அழியா பாடல்களை கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கின்றார்

“மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு..”

“யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி..”

‘உன்னை கண் தேடுதே”

“ஆடாத மனமும் ஆடுதே..”

“அமுதை பொழியும் நிலவே..”

“சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி”

ஜாணகியின் முதல் பாடலான “சிங்கார வேலனே தேவா..”

சந்திரபாபுவின் அடையாளமான “குங்கும பூவே”

இன்னும் காளிதாஸ் படத்தில் கண்ணதாசனின் சாயலில் வரும் “மலரும் வான் நிலவும்”

என பட்டியல் நீள்கின்றது, அக்கால சூப்பர்ஹிட் பாடலை எல்லாம் எழுதியிருக்கின்றார்

அந்த மாபெரும் கவிஞனின் மகன் எனக்கு மிக உற்ற முகநூல் நண்பராகி புத்தகம் எல்ல்லாம் அனுப்புகின்றார் எனும்பொழுது, பெரும் அறிஞர்கள் நிரம்பிய சபையில் ஒரு வீணாய் போன பரதேசியினை நுழைய சொன்னால் என்ன கூச்சம் இருக்குமோ அது நெஞ்சில் படர்கின்றது

எத்துணை பெரும் பாரம்பரியம் உள்ளவர்கள் எல்லாம் நண்பர்களாகியிருக்கின்றார்கள் என நினைக்கும் பொழுது மகிழ்வும் அச்சமும் மனதில் குடிகொள்கின்றது

அவர் கொடுத்த புத்தகங்களை வாசித்துகொண்டே அவருக்கு நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்

அதில் ஒரு புத்தகம் திராவிட அழிச்சாட்டிய கும்பலால் எழுதப்ட்டிருக்கின்றது, பலவகை காமெடிகளை சீரிசயாக எழுதியிருக்கின்றார்கள்

பிராமண எதிர்ப்பு எனும் ஒற்றை பார்வையில் எழுதப்ட்ட அந்த பக்கங்கள் மத நம்பிக்கை தமிழர் வாழ்வில் எந்த அளவு ஆழபதிந்திருந்தது எனவும் மறைமுகமாக சொல்கின்றது, அதில் சறுக்குகின்றார்கள்

அவர்களுக்கு ஒரு பாயின்ட் கிடைத்துவிட்டதாம் அதாவது உ.வே.சாமிநாதய்யர் ஒரு இந்து வெறியராம். இந்துக்களை உயர்த்தாத புத்தகங்களை அவர் அச்சிக்கு கொண்டுவரவில்லையாம்

அதில் ஒன்று தொல்காப்பியமாம், தமிழர் பெருமை அதில் மதமின்றி இருக்குமாம். உவேசு அய்யர் எனும் மாமனிதன் ஜாதி மத வெறியனாம்

அட பதர்களா?

தொல்காப்பியரின் சில பக்கங்கள் குழப்பமானவை. உதாரணம் பாலை நிலமும் அதில் ஒட்டகமும் தமிழ்நாட்டில் உண்டு என எழுதிவைத்திரிந்தார்

தமிழகத்தில் வறண்ட நிலம் உண்டே தவிர பாலை இல்லை அதில் ஒட்டகமும் இல்லை. இதனால் அது கடும் குழப்பத்தை ஏற்படுத்திற்று

இம்மாதிரி சில விஷயங்கள் இருப்பதால் முழு தொகுப்பும் கிடைத்தபின் அச்சில் ஏற்றலாம் என்று எண்ணம் கொண்டிருந்த அய்யருக்கு அது கிடைக்காமல் போனதில் அது முடியாமல் போயிற்று

இது நடந்த உண்மை. ஆனால் இவர்கள் என்னவெல்லாமோ சொல்கின்றார்கள். இன்னும் என்னென்ன குழப்பம் எல்லாம் விதைத்து வைத்திருக்கின்றார்களோ தெரியாது

பெரும் முட்டாள் தலைமுறையினை பிராமண எதிர்ப்பு எனும் ஒற்றைபுள்ளியில் உருவாக்கும் திட்டம் இருந்திருக்கும் போலும்

அந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க படிக்க சிர்ப்பு வருகின்றது, இப்படி எல்லாமா அபத்தமாக சிந்தித்து அதனை புத்தகமாகவும் எழுதுவார்கள்

போகட்டும், ஆனால் தமிழனுக்கு மதம் இருந்ததை ஒப்புகொள்கின்றார்கள்

தொடர்ந்து படிக்கின்றேன், இன்னும் வாசிக்க வேண்டியது இருக்கின்றது

என் மீதும் மரியாதை கொண்டு நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்