நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்
நெல்லை மாவட்டத்திற்கான அறிவிப்புகள் இப்பொழுதெல்லாம் ஏராளம் வருகின்றன
அணுவுலை, ராக்கெட் நிலையம், கடறபடை தளம் எல்லாம் மத்திய அரசு கொடுத்தது பல வகை
இப்பொழுது மாநில அரசு கொடுப்பது வேறுவகை
பல ஆலயங்களை சுற்றுலா தளமாக்கிவிட்டார்களாம், அதில் கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயமும் ஒன்றாம் அதற்கு பல கோடி ஒதுக்கீடாம்
(ஆலயங்கள் என்றால் மக்கள் தானாய் தேடிவருவார்கள், இதற்கு எதற்கு விளம்பரம் என எல்லாம் நாம் கேட்க கூடாது)
உவரி பக்கம் மீணவருக்கான துறைமுகம் அமைக்கபட சில நூறு கோடி ஒதுக்கீடாம்
இப்பொழுது சமூகரங்கபுரத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்க போகின்றார்களாம்
இப்படி நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்
சரி இவ்வளவு செய்கின்றார்களே? நல்ல நீர் ஆதாரம் உண்டா? மழை பொய்த்த காலங்களில் குடிநீருக்கு விவசாயத்திற்கு என்ன வழி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது
ராதாபுரம் பகுதிக்கு தேவை மிக பெரிய நீர் ஆதாரம் அதனை மேற்கு நோக்கி பாயும் ஓடைகளில் சிலவற்றை திருப்பி கிழக்கே அனுப்பாமல் தீர்வே இல்லை
அதை செய்வார்களா என்றால் அது பற்றி எல்லாம் நாம் பேசகூடாது….