நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது
நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது
அதற்கு உயிர்கொடுக்கும் கடைசி முயற்சியாகத்தான் தலைவி குஷ்பு அப்ப்பக்கம் வந்தார், அதனை சிலர் எதிர்த்திருக்கின்றார்கள்
ஆக காங்கிரசுக்கு எதிரிகள் அக்காலத்தில் இருந்தே காங்கிரசார் மட்டும் எனும் பாரம்பரியம் பாதுகாக்கபட்டிருக்கின்றது.
இனி காங்கிரசுக்கு நெல்லையில் செய்ய வேண்டியது அடக்கம் மட்ட்டும்தான்
காங்கிரசாரின் இந்த பைத்தியகாரத்தனமான செயலை சங்கம் பரிதாபமாக பார்க்கின்றது, இனி அவர்களை காப்ப்பாற்ற காமராஜர் வந்தாலும் முடியாது
இதனால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு அவமானம்? நிச்சயம் தலைவி குஷ்புவிற்கு அல்ல. நாளை அவர் அமைச்சராக இதே அலுவலகத்திற்கு வந்தால் இவர்கள் தாமிரபரணியில் குதித்து செத்துவிடுவார்களா?
இதனை போன்ற ஆயிரம் எதிர்ப்புகளை கடந்துவந்தவர் எம் தலைவி என்பதால் இந்த பதர்கள் எல்லாம் ஊதிதள்ளபடுவார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
ஏ பதர்களே, எங்கள் தலைவியினை பார்ர்த்து குரைத்துவிட்ட ஜீவன்களே இவ்வளவுதான் உங்களால் செய்ய முடியும், இதனை விட என்ன கிழித்துவிட முடியும்?
அந்த பூட்டை பத்திரமாக வைத்துகொள்ளுங்கள்
எங்கள் தலைவி மாண்புமிகு மத்திய அமைச்சராக இதே நெல்லைக்கு வரும் காலத்தில், அவருக்கு பூந்தேரில் சங்கம் வரவேற்பு கொடுக்கும் காலத்தில் நீங்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைதெறிக்க ஓட அந்த பூட்டு உதவும்
இவர்கள் நிச்சயம் காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது, அந்த கயவ தலைவன் திருநாவுக்கரசு போல ஸ்லீப்பர் செல்களாக மட்டுமே இருக்க முடியும்
இந்த களைகளை கண்டெடுத்து பறிக்க வேண்டியது காங்கிரஸ் தலமையின் பொறுப்பு
அப்படி அவர்கள் ஸ்லீப்பர் செல்லாக இல்லாவிட்டால் இந்த பரிதாபத்திற்குரியவர்கள் நிச்சயம் மனக்கோளாறு பிடித்தவர்களாக இருக்க முடியும், அவர்களுக்கான சங்கிலி செலவு முதல் கீழ்பாக்க செலவு வரை சங்கம் ஏற்றுகொள்ளும்.
ஆயிரம் அலைகளை தாண்டி, லட்சம் சூறாவளிகளை கடந்து ஏகபட்ட பிரளயங்களை எல்லாம் சந்தித்து தன் வெற்றிபயணத்தை தொடரும் தலைவியின் பயணம் இந்த சிறு தூசுக்களை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாது
சங்கத்தின் நெல்லை கிளை இதனை வன்மையாக கண்டிக்கின்றது, தலைவி இதுபற்றி ஒன்றும் கவலைபட வேண்டாம் என்று சங்கம் தன் அறிக்கையில் கேட்டுகொள்கின்றது
சங்கம் நேற்றிரவு அவசரசமாக கூடி இதற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என முடிவெடுத்தது அதன் படி தலைவியின் செருப்புகளில் ஒன்றை கொண்டுவந்து அந்த பூட்டின் மீது அடித்து இந்த செருப்பு தகுதி கூட அந்த பூட்டிற்கு இல்லை எனும் எதிர்ப்பினை தெரிவிக்க சங்கம் தயாராகின்றது