நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர்

தென் தமிழகத்தில் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் தேர்வில் சொதப்பியிருக்கின்றது என்கின்றன செய்திகள்

நிச்சயம் அந்த அப்பாவு என்பவர் சரியான தேர்வாக இருந்திருக்க கூடும்

இப்போதைய வேட்பாளர் மேல் பலத்த சர்ச்சைகள் ஏராளம் ஓடிகொண்டிருக்கின்றது அது திமுகவின் மொத்த இமேஜையும் காலி செய்திருக்கின்றது

பொதுவாக அப்பகுதி காங்கிரஸின் கோட்டை, அதை உடைத்து திமுகவினை மிக நுட்பமாக வளர்த்திருந்தார் கலைஞர்

அப்பாவு என்பவரை அப்படித்தான் உள்ளே இழுத்து போட்டு கட்சியினை வலுவாக வைத்திருந்தார்

இப்பொழுது அனுபவம் குறைந்த ஸ்டாலின் அதை அடித்து நொறுக்கிவிட்டார்

திமுகவின் வெற்றி அங்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்பதால் மனோஜ் பாண்டியன் கோஷ்டி மர்ம சிரிப்பு சிரிக்கின்றது

அங்கு மிகபெரும் வெற்றிபெற வேண்டிய திமுக , அறிவாலயத்தில் கோடிகளை கொட்டினால் சீட் கிடைக்கும் என்ற ஒருவித “நல்ல” பெயருடன் தவித்து கொண்டிருக்கின்றது

கலைஞர் காலத்து ஆட்களை ஸ்டாலின் விலக்குவது கட்சிக்கு சரியல்ல‌

கலகலத்து கிடக்கின்றது கலைஞர் உருவாக்கிய நெல்லை திமுக முகாம்..

வசந்தகுமார் அங்கு அட்டகாசமாக நெல்லையின் தென்பகுதி குமரி என கட்சியினை வலுபடுத்தி வருகின்றார்

அவருக்கு சவாலாக அப்பாவுவினை உருவாக்கி இருக்கலாம் அந்த வாய்ப்பினை ஸ்டாலின் பறிகொடுத்துவிட்டார்

இன்னும் ஏராளம் பறிகொடுப்பார் இருந்து பாருங்கள்..