நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது, ஒருவனுக்கு திருமணம் நிச்சயக்கபட்டிருகின்றது. இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவன் தற்கொலை செய்திருக்கின்றான்

செத்தவன் ஏன் செத்தான்? எதற்கு செத்தான் என்பது தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் தூரவழி ஏகிவிட்டான்

இதனால் இப்பொழுது பாதிக்கபட்டிருப்பது யாரெனில் அந்த மணப்பெண், அவர்தான் பரிதாபம்

அவன் சாக என்ன காரணமும் இருக்கட்டும், சாவது என முடிவெடுத்தபின் அதனை எழுதிவைத்துவிட்டாவது செத்திருக்க வேண்டாமா?

நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு தாலிகட்டுவதற்கு முன்புதான் செத்துபோவேன் என்பது மிக பெரும் துரோகத்தில் ஒருவகை

சும்மாவே கதைகளை அள்ளிவிட்டு, மூட நம்பிக்கையில் ஊறிபோயிருக்கும் அந்த பகுதியில் இனி அப்பெண்ணின் எதிர்காலம் பெரும் கேள்விகுறி. மிகபெரும் சிக்கலை அந்த அப்பாவி பெண் எதிர்கொள்ளும் நேரமிது

திடீர் மாப்பிள்ளை எல்லாம் சினிமாவில் சாத்தியமே அன்றி நிஜத்தில் அல்ல.

குற்றம் செய்ததெல்லாம் இவன், பெற்றோரின் சொல்கேட்டு தலையினை ஆட்டியதை தவிர அப்பெண் ஒரு பாவமும் செய்யவில்லை

இந்த அளவு அவனை சாக தூண்டிய நெருக்கடி எது என தெரியவில்லை, ஆனால் இப்படி ஒரு பெண்ணின் வாழ்வினை பாழாக்க‌ செய்தவனை தற்கொலை செய்ய விட்டிருக்க கூடாது,

மாறாக அடித்தே கொல்ல வேண்டும்