நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளியில் நடந்த கோரம்…

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளியில் அடுத்த சோதனை நிகழ்ந்திருக்கின்றது

அதாகபட்டது ஒரு தனியார் பள்ளி விழா கொண்டாடியிருக்கின்றது, குழந்தைகள் பள்ளியில் ஏன் இரவில் கொண்டாட வேண்டும் என்றேல்லாம் யாரும் கேட்க கூடாது

அவர் தாளாளர், நிறைய பிரமுகர்களை அழைத்ததால் இரவில்தான் நடத்துவார். இதில் மாணவர்கள் விருப்பம் எல்லாம் ஒன்றுமில்லை

அப்படி இரவில் மிக பிரகாசமான விளக்குகளை எரியவிட்டதில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கண்களில் தாங்கமுடியாத பிரகாசம் காரணமாக பெரும் பிரச்சினை வந்தாயிற்று

கிட்டதட்ட 30 குடும்பங்கள் பாதிக்கபட்டிருகின்றன‌

பிரச்சினை கலெக்டர் வரை சென்று அவரும் யாருக்க்கும் கண்களில் பாதிப்பிலை என சொல்லிவிட்டார்

நாமும் கண்களை மூடிகொண்டு நம்புவோம், பொதுவாக நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு சோதனையான காலம் இது