நேற்றைய அதிர்ச்சி லட்சுமி, இன்றைய அதிர்ச்சி ஜோதிகா

உதிரி பூக்களில் ஒரு காட்சி உண்டு

உடல்நலமில்லா மனைவியிடம் விஜயன் சொல்வார் “உனக்கு உடம்பு சரி இல்ல, இனி உன்னோட வாழ்ரதுல அர்த்தம் இல்ல. அதனால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ணு இருக்கேன்”

அந்த அஸ்வினி மனதிற்குள் சொல்வார்

“இதே நிலமையில நீங்க இருந்து, நான் இப்படி சொன்னா இந்த சமூகம் என்னை பற்றி என்ன சொல்லும்?”

சாட்டையடி வசனம் அது.

உதிரி பூக்கள் காலத்தை வென்று நிற்பது இம்மாதிரி வசனங்களால்தான், அந்த மகேர்ந்திரனிடம் முதிர்ச்சி இருந்தது.

இப்போது இருப்பவர்களிடம் அந்த முதிர்ச்சி சுத்தமாக இல்லை. பெண் உரிமை பேசுகின்றோம் ,பெண்ணை தைரியமாக காட்டுகின்றோம் என நமக்கு அதிர்ச்சிதான் கொடுக்கின்றார்கள்.

நேற்றைய அதிர்ச்சி லட்சுமி, இன்றைய அதிர்ச்சி ஜோதிகா