நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம்

Image may contain: 2 people, crowd

உலகில் ஏராளாமனா தீவிரவாத குழுக்கள் உண்டு, ஆளாளுக்கு ஒரு கொள்கை, சில ஆயுதம் ஏந்துகின்றன‌. ஆயுதம் இல்லாவிட்டால் சீமானின் தொண்டை போன்ற கொடுமைகள் அவரின் தம்பி போன்றோரின் இம்சைகள் என நிரம்பிய உலகிது

இதில் பல கொடூரமானவை, சில நியாயமானவை , சில தீவிரவாத இயக்க கொள்கைகள் வெறும் கனவு, சில இயக்கம் மகா காமெடி வில்லன் ரகம்

அதிலொன்று நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம்

பூ எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வண்டுகள் பறப்பதும், கச்சா எண்ணெய் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தீவிரவாத இயக்கங்கள் உருவாகிவருவதும் இயல்பு

அப்படி எண்ணெய் வள நைஜீரியாவில் உருவான பல இயக்கங்களில் ஒன்றான பொக்கோ ஹராமின் கொள்கை இஸ்லாமிய நைஜீரியா.

இஸ்லாமை எப்படி பரப்புவது? துப்பாக்கு முனையிலா என்றால் அது சவால், போதித்து அன்புவழி என்றால் அவர்களுக்கு பொறுமை இல்லை. ஆனால் இயக்க கொள்கை இஸ்லாமை பரப்புவது எப்படி என சிந்தித்தவர்களுக்கு அருமையான திட்டம் பிடிபட்டிருக்கின்றது

துப்பாக்கி ஏந்தி போராடி,செத்து பிழைத்து போர் நடத்துவதெல்லாம் கஷ்டம் அது நீண்ட போராகும், மதம் பற்றிய அறிவும் நமக்கு இல்லை அதனால் பிள்ளைகளை பெற்று இஸ்லாமியராக வளர்த்துவிட்டால் மத சேவை, நம் கொள்கை எல்லாம் காப்பாற்றி ஆயிற்று என முடிவு செய்தார்கள்

முடிவாயிற்று இனி நடவடிக்கை என்ன?

ஊரில் வெட்டியாக, காதல் தோல்வி இதர தோல்வி அல்லது வெறிகளில் திரிந்தவனை கூட்டி இயக்க கொள்கையினை அறிவித்தாயிற்று, “உறுப்பினர்களே நம் கொள்கை இஸ்லாமை பெருக்குவது அதனால் நாம் அனைவரும் பல திருமணம் செய்து சந்ததிகளை உருவாக்கி அவர்களை 
இஸ்லாமியராக வளர்க்க வேண்டும்

இது தொலைநோக்கு திட்டம், அதனால் பல மனைவிகள் ஏராளமான பிள்ளைகள் என பெலுகிகொண்டே இருக்கவேண்டும், 20 வருடத்தில் பூரண இஸ்லாமிய நாட்டை அமைத்துவிடலாம். மணமும் பிள்ளைபேறும் மட்டும் உங்கள் சேவை, அதனைத்தான் எதிர்பார்க்கின்றோம் இதில் கடின உழைப்பை நீங்கள் தந்தால் கடவுள் ஆசீர்வதிப்பார்”

இது யாருக்கு கசக்கும்? இயக்க எண்ணிக்கை பெருகிற்று

அடுத்து என்ன செய்தார்கள்? பெண்கள் படிக்கும் பள்ளியினை தாக்கி மாணவிகளை கடத்தி சென்று இயக்க உறுப்பினர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்

இதுவரை 400 மாணவிகள் காணாமல் போன நிலையில் , இப்பொழுது 100 மாணவிகள் கடத்தபட்டாயிற்று

இந்த இயக்கத்தவரின் வீரத்திற்கு எடுத்துகாட்டே இவர்கள் எங்கு வைத்து குடும்பம் நடத்தி இயக்க கொள்கையினை பரப்புவார்கள் என்பதுதான், பல நாட்டு படைகள் தேடியும் யாரையும் கண்டுபிடிக்கவில்லை

சில கோழை வீரர்களின் திறன் இன்மையால் சில மாணவிகள் மட்டும் மீட்கபட்டார்கள்

நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் பொக்கோ ஹராம் தீவிரவாதிகளின் சாகசம் தொடர்கின்றது, இயக்க கொள்கையால் கவரபட்ட ஏராளமான இளைஞர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து கலந்து வீரப்போர் புரிகின்றார்கள்

விஷயம் பெரும் சிக்கலாகின்றது, இதில் ஓடி போகும் காதலர்கள், கள்ள காதலர்கள் எல்லாம் பொக்கோ ஹராம் கடத்திவிட்டது என சொல்லி ஓடுகின்றார்களாம்

படிப்பு பிடிக்கா மாணவிகள் பெற்றோர் ஆசிரியரிடம் எல்லாம் “அதிக கெடுபிடி காட்டினால் பொக்கோ ஹராம் பையனுடன் பறந்துவிடுவேன் இதோ அங்குதான் நிற்கின்றான்” என மிரட்டுகின்றார்களாம்

பொக்கோ ஹராமின் இந்த அட்டகாசத்தை எப்படி ஒடுக்க என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது நைஜீரிய அரசு

இந்த இயக்கமும் அதன் கொள்கையும் அங்கிள் சைமனின் தும்பிகளுக்கு தெரியாமலிருப்பது வரை நல்லது. தெரிந்து அவர்கள் பரீசிலித்தால் அதன்பின் தமிழகத்தினை காலி செய்துவிட்டு எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்

“சுத்தமான சுத்திர்கரிக்கபட்ட‌ தமிழினம் படைக்க” அவர்கள் கிளம்பினால் என்னாவது?