பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான்

கடவுள் இல்லை என்பது 18ம் நூற்றாண்டின் உலக ஸ்டைல், நாத்திகவாதம் ரஷ்யாவில் தொடங்கி சீனாவில் பரவி பல நாடுகளில் பரவிற்று

இந்தியாவிலும் அது பரவியது, அதில் ஈர்க்கபட்டவர்தான் பெரியார்

ஆனால் சிகப்பு சட்டை போட அவருக்கு இரு தயக்கம் இருந்தது, ஒன்று அவருக்கு இருந்த ஏகபட்ட சொத்து, இன்னொன்று கம்யூனிசம் பேசினால் தூக்கிபோட்டு மிதிக்கும் வெள்ளையன்

இதனால் கம்யூனிசத்தை தமிழக ஸ்டைலில் இந்து எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆக்கினார்

செஞ்சட்டையினை கருப்பு கொடி ஆக்கினார் தீர்ந்தது விஷயம்

இதனால் பெரியார் அரசால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்த்தார் , திராவிட நாடு அது இது என சொல்லிகொண்டிருந்ததால் வெள்ளையனுக்கும் ஜின்னா போல பெரியார் மனதிற்குள் மகிழ்வானார்

ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ சபைக்கு எதிராக கேட்கபட்ட கேள்விகள் எல்லாம், கட்டுரைகள் எல்லாம் அண்ணாவின் ஆங்கில புலமையால் தமிழுக்கு வந்தது

அது பெரியாரின் பகுத்தறிவு சுய அறிவு என அவர் கும்பலால் கொண்டாடபட்டது

மார்க்ஸும், இங்கர்சாலும் கேட்ட கேள்விகள் எல்லாம் பெரியாரின் சிந்தனையாக இங்கு கொண்டாடபட்டது

திருச்சபை இருக்கும் இடத்தில் இந்துமதத்தையும், கிறிஸ்தவ துறவிகள் இருக்க்கும் இடத்தில் பிரமாணரையும் வைப்பது மிக எளிதாயிற்று

பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான், ரஷ்ய பொதுவுடமை இங்கு இட ஒதுக்கீடு என சுருங்கியது

ஆனால் வெளிதெரியாமல் பார்த்துகொண்டார்கள் என்பதுதான் சாமார்த்தியம்

இது எதில் முடிந்தது?

கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிச வளர்ச்சி போல் இங்கும் அக்கட்சி வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் பாட்டாளிகள் வர்க்கமோ பெரியார் கும்பலால் வளைக்கபட்டு கம்யூனிஸ்டுக்கு பதில் இங்கு திராவிடம் வளர்ந்தது

பின் என்னாகும்? திராவிட தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உயர்ந்தார்கள், சமூகம் உயரவில்லை

இன்று பெரியாரின் சொத்துக்களை பாதுகாக்க வீரமணிக்கு பெரியாரும், திரண்டுவிட்ட சொத்துக்களையும் சுவைத்துவிட்ட அதிகாரத்தையும் பாதுகாக்க அந்த திராவிட கொள்கைகள் தேவைபடுகின்றன‌

உலகெல்லாம் கம்யூனிசம் துடைக்கபட்டது பாலத்தின் விதி , அப்படியே இங்கும் அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும் ஒரு காலத்தில் நடக்கத்தான் செய்யும்

இதில் எம்மை திட்டி ஒன்றும் ஆகபோவதில்லை