“பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு..” கலைஞருக்கு உண்டு… இன்னும் பிற

Image may contain: 1 person, smiling, sunglasses

அது கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டம், சாதி பிரச்சினையில் ஆங்காங்கு பெட்ரோல் குண்டுகள் வீசபட்டன, தன் ஆட்சிகாலத்தில் சந்திரலேகா மீது ஆசிட் வீசபட்டத்தை மறந்த ஜெயலலிதா சொன்னார்

“கலைஞரின் ஆட்சியில் குண்டு கலாச்சாரம் வந்துவிட்டது”

பெரும் பிரச்சினையாக மாறிகொண்டிருந்த , அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் ஜெயாவின் இந்த குற்றசாட்டினை முன்வைத்து கேள்வி கேட்டனர்

தனக்கே உரித்தான புன்னகையுடன் சொன்னார் கலைஞர்

“என்னது? குண்டு கலாச்சாரமா?, அம்மையாரை பார்த்தாலே தெரியவில்லையா, யார் குண்டு கலாச்சாரத்தை கொண்டு வந்தவர்களென்று”

சொல்லிவிட்டு அடுத்த கேள்வி? என அவர் சீரியசாக கேட்டார்

எல்லா கேள்வியினையும் மறந்து பத்திரிகை கூட்டம் வாய்விட்டு சிரித்துகொண்டிருந்தது

கலைஞர் அப்படி குறிப்பிட்டு சொன்னபிறகும் தன் உடல்நிலையில் ஜெயா அக்கறை காட்டவில்லை. ஒருவேளை அதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நம்மோடு இருந்திருப்பார்.

ஜெயாவின் சிக்கலுக்கு காரணம் உடல்பருமன் என்பதும் ஒரு தியரி, கலைஞர் அன்றே மிக சரியாகத்தான் ஆலோசனை சொல்லியிருக்கின்றார்.

“பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு..” கலைஞருக்கு உண்டு,

அப்படி பல சுவாரஸ்யங்களுக்கு சொந்தக்காரர் கலைஞர், அம்மனிதரை மனம் தேடிகொண்டே இருக்கின்றது


எம்.ஜி.ஆர்., அண்ணன் மகன் சந்திரன், புதிய கட்சி துவக்கிஉள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், வேட்பாளரை நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆக அதிமுக சார்பாவகே ஆர்.கே நகரில் 20 வேட்பாளர்கள் நிற்பார்கள் போலிருக்கின்றது

முதலில் அதிமுகவினருக்கு ஒரு தேர்தலும், அவர்களில் ஒருவர் வென்று, அவர்களுடன் மற்ற கட்சியினர் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளும் அளவு நிலமை செல்லலாம் என அஞ்சபடுகின்றது.

“இரட்டை தேர்தல் முறை” கொண்டுவருமா “இரட்டை இலை”?

ஜெயா தோழி, ஜெயா அண்ணன் மகன் என ஒருபுறம், இப்பொழுது எம்ஜிஆர் அண்ணன் குடும்பம் இன்னொருபுறம்.

செத்தும் தமிழ்நாட்டை கெடுத்துகொண்டிருப்பவர்கள் அந்த ராமசந்திரனும் அவரின் ஜெயலலிதாவும் என்பதில் சந்தேகமே இல்லை..


 

விரைவில் உள்ளாட்சி தேர்தல்

இன்று ஓரளவு அமைதி கிராமபுறங்களில் நிலவுகின்றது, பெரும் தகறாறுகளோ , சண்டைகளோ இல்லை

அந்த குறையினை தீர்க்கத்தான் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தபட இருக்கின்றது

இப்படி தேர்தல் வைத்தால்தான் சாதி, மதம்,அடுத்த தெரு, அடுத்த வீடு, குடும்பம் உட்பட எல்லா தகறாறும் வரும்,

தகாறாறே இல்லை எனும் குறை இதனால் முழுக்க தீரும்,,

அந்த தகறாறை தீர்த்துவைக்க தலைவர் தேவை, தலைவரை தேர்ந்தெடுக்க கண்டிப்பாக தேர்தல் தேவை

ஆக அமைதியாக இருக்கும் கிராமங்களில், அந்த குறையினை தீர்த்து, அந்த களபேரத்தை தீர்க்க ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அந்த பகையினை அப்படியே தொடர்வதன் பெயர்தான் உள்ளாட்சி தேர்தல்…