பங்குனி உத்திர திருவிழா!
updated on March 24, 2024
பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர்.
சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது.
மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும்
சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, ஆதார பூர்வமான சக்தி
இதை தனக்கே உரித்தான தத்துவ வடிவிலும், மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் தெய்வங்கள் பலருக்கும் திருமணம் நடந்த நாள் என சொல்லிற்று இந்துமதம்
ஆம், ஒரு மனிதனின் இயக்கமும் வெற்றியும் வாழ்வும் அவனுக்கு கிடைக்கும் மனைவி எனும் பெரும் சக்தியிலேதான் இருக்கின்றது. மனைவி இல்லையேல் ஆணுக்கு எதுவும் ஊக்கமுமில்லை வெற்றியும் மகிழ்வும் சாத்தியமுமில்லை
மனைவி என்பவள் ஒரு பெரும் சக்தி
அப்படியே இந்நாளில் வழிபட்டால் அன்று நல்ல மனைவி போல பெரும் நல்ல சக்தி, உந்து சக்தி, ஆதார ஒரு மனிதனுக்கு கிடைக்கும் என்பதையே வலியுறுத்தி சொன்னது இந்துமதம்
சிவனுக்கு சக்தி கிடைத்தது போல், விஷ்ணுவுக்கு லட்சுமி கிடைத்தது போல் அதாவது எது இன்றி ஒருவன் இயக்க முடியாதோ அந்த பெரும் சக்தி கிடைக்கும் நாள் இது என்றது அந்த ஞானமதம்
அது பங்குனி உத்திர வழிபாடு என்றாயிற்று.
இந்த மங்கள நாளில்தான் ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தது, சிவபெருமான் மன்மதனுக்கு உயிர்கொடுத்து மானிட இனம் பலுக செய்தார் என்பதெல்லாம் ஒருவன் ஆதார சக்தியினை இந்நாளில் பெறுவான் என காட்டிய லவுகீக வடிவமே, மக்கள் புரிந்து கொள்ளும் வடிவமே
அந்நாளில் தொடங்கும் காரியம் சிறப்புறும் என்பதற்காக முருகன் மலையினை பிளந்த வரலாற்றையும் இந்நாளில் நடந்ததை சொன்னார்கள்
இந்நன்னாளில் முழு பவுர்ணமி நாளில் குலதெய்வங்களிடமெல்லாம் வழிபட்டு சக்தி பெற சொன்ன இந்துமதம் முருகனின் வழிபாட்டை மிக ஆழமாக வற்புறுத்தியது
இதற்கு இரு காரணங்கள் உண்டு
முருகன் கோவில் மலைமேல் அமைந்திருக்கும் அல்லது கடலோரம் , ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும். உத்திர நட்சத்திரமும் நிலவும் கூடும் அந்நாளில் சில விஷேக நல் கதிர்களும் சக்திகளும் வெளிபடுகின்றன
அது மலைமேலும், நிலவொளிபடும் நீர் நிலைகள் மேலும் அதிகமாக விழுகின்றன. அந்த நல் சக்தியினை மக்கள் பெரும் பொருட்டே முருகன் கோவிலில் அவர்களை கூட சொன்னது
பழனியிலும் திருசெந்தூரிலும் உத்திரம் மிக விஷேஷமாக கொண்டாபடும் ரகசியம் இதுதான்
முருகனின் 12 கரம் போல 12ம் மாதமான பங்குனியில் அவனை வழிபட்டு நன்றி செலுத்தி ஆண்டு கணக்கினை நன்றியோடு முடிக்கும் நன்றி அறிவித்தலும் அதில் இருந்தது
சக்திகள் பெருகும் நாளில் குல தெய்வ ஆசியினையும் பெற வழிகோலிற்று இந்துமதம், பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது எனவும் அது சொல்லிற்று
முன்பு சொல்லியபடியே மலைகளிலும், நீர் நிலைகளிலும் உத்திர பவுர்ணமியின் ஆகர்ஷண சக்தி அதிகரிக்கும், அந்த கணம் அதன் அருகில் நின்றால் மானிடருக்கு நற்சிந்தனையும் பலமும் மனதெளிவும் கிடைக்கும்
பவுர்ணமி என்பது முழு நிலவு அதாவது ஜாதக விதிபடி சந்திரனே ஒவ்வொருவரின் மன வோட்டத்துக்கும் காரணம் என்பதால் அந்த முழுநிலவு நாளில் மனம் ஒரு எழுச்சியில் இருக்கும்
அந்நாளில் மிக சரியான நீர் நிலை பக்கமோ மலையிலோ அவன் நின்றால் சில நல்ல சிந்தனையும் அதிர்வும் அவனுக்கு வரும்
இதனால் மிக சரியாக குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நீர்நிலை பக்கம் அவனை வரசொன்னது இந்துமதம்
பங்குனி உத்திர குலதெய்வ வழிபாடு என ஆற்றங்கரையிலும், குளம் ஏரிகரையிலும் பொங்கலிட வைத்த ஏற்பாடு இதுதான்
இதில் பல நுணுக்கமான விஷயங்களும் ஏற்பாடுகளும் இருந்தன
முதலில் குளங்களும் ஏரிகளும் அமைக்கபட்டு அதில் குலதெய்வம் என ஒன்று நிறுத்தபட்டு குளமும் ஏரியும் அதன் சொத்து என உறுதிபடுத்தபட்டது, அந்த தெய்வ நம்பிக்கையில் குளங்களும் ஏரிகளும் காக்கபட்டன
அந்த தெய்வத்துக்கு அஞ்சி அவை மிக நன்றாக பேணபட்டன, குளங்களும் ஏரிகளும் நிரம்பிய ஊர் செழிப்பாய் இருந்தது, நிலத்தடி நீருகும் பஞ்சமில்லை
குலதெய்வ வழிபாடே சொந்தங்களும் பந்தங்களும் விலகி கொள்ளாமல் இருக்கவும், எல்லோரும் ஓரிடத்தில் பரம்பரை பரம்பரையாக கூடவும் அது வழிசெய்தது
மகா முக்கியமாக இப்படி உத்திரம் போன்ற நாட்களில் நீர்நிலைகளில் அருகில் நின்று பிரபஞ்ச சக்தியினை பெறவும் அது வழிசெய்தது
இப்படி ஏகபட்ட சூட்சுமான, பிரபஞ்ச ரகசியம் அடங்கிய, ஆன்மீகமும் இன்னும் பலவும் மானிட வாழ்வின் எல்லா பக்கங்களும் வளம்பெற செய்யபட்ட ஏற்பாடு அது
அப்படிபட்ட மிக முக்கியமான நாள் இது
முருகபெருமானின் ஆலயங்கள் எல்லாம் இந்த விழா கொண்டாடடும், ஆனால் மிக சிறிய சாஸ்தா ஆலயங்களிலும் அது பெரும் விழாவாக கொண்டாடபடும்
குறிப்பாக சாஸ்தா ஆலயங்களில் இந்த வழிபாடு மிக மிக விஷேஷமானது
சாஸ்தா என்பவர் காவல்தெய்வம், குறிப்பாக நீர் நிலைகளின் அருகில் அவருக்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும், சில உபதேவதைகளோடு அமர்ந்திருப்பார். அவரவர் வலிமைக்கு தக்கபடி 1008 தேவதை, 108 தேவதை அல்லது ஆக கடைசியாக 21 உபதேவதை கொண்ட சாஸ்தாக்கள் உண்டு.
ஆம் நீர்நிலைகளில் மட்டும்தான் அவரை அமர்த்தியிருப்பார்கள், வாழ்வின் அடி ஆதாரமான நீருக்கு அவரே காவல் என்றது இந்துமதம், அதில் உண்மையும் உண்டு
சாஸ்தா எனும் பெயர் எப்படி வந்தது?
சாத்து எனும் தமிழ்சொல்லுக்கு சேர்ந்து இருப்பது என பொருள், பெரும்பாலும் ரத,கஜ, நாக, துதி பரிவாராங்களுடன் அமர்ந்திருப்பார். மிக கண்டிப்பாக நீர் ஆதாரங்களின் கரையில் மட்டும் இருப்பார்,
பஞ்சகாலங்கள் அவரை மட்டும் பாதிப்பதே இல்லை.
சாத்தன் எனும் சொல்லுக்கு கூட்டத்தின் தலைவன் எனவும் பொருளுண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாஸ்தா எனும் சொல் சாத்தா என மாறி,பின்னாளில் சாத்தான் என மாறிற்று, அர்த்தமும் மாறிற்று.
மொழிமாற்றமும்,அடையாள மாற்றமும் எவ்வளவு பெரிய விபரீதத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு சாஸ்தா, சாத்தானாக மாறியதை தவிர பெரும் உதாரணம் சொல்ல முடியாது.
விவசாயம் பிசாசு தொழிலாக மாறி தொட்டவனை அழித்துவிடும் என நிலை வந்தபொழுது, மூலவர் சாஸ்தாவும் பலருக்கு வேண்டாத சாத்தான் என மாறிற்று.
சாஸ்தா எனும் தெய்வம் சாத்தான் என மாறி இன்று அரைகுறை கிறிஸ்தவர்கள் வாயில் சிக்கியிருப்பது இப்படித்தான்
இன்று பல குளங்கள் அழிந்தது அதோடு பல சாஸ்தா ஆலயங்களும் அடையாளமற்றது.
பங்குனி உத்திர நாளன்று, மறக்காமல் குலதெய்வழிபாடு செய்யவேண்டும் என முன்னோர்கள் வகுத்ததால், ஏராளமான மக்கள் குளக்கரைக்கு சென்று சாஸ்தா வழிபாடு செய்கின்றார்கள்., எல்லா தெய்வமும் வேறு இடங்களுக்கு மாற்றபடலாம், ஆனால் சாஸ்தா அந்த இடத்தில்தான் இருப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த குளமும் இந்த வயல்காடுகளும் தான் நம்மை வாழவைக்கிறது, நமக்கு பின்னால் நம் சந்ததிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது வந்து அப்பகுதிகளை பார்வையிட வேண்டும், ஒன்றாக பந்தியமர வேண்டும்,சொந்தங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பினை விட்டுகொள்ளமுடியாதபடி ஒரு சங்கிலி பந்தம் தொடர முன்னோர்களால் ஏற்படுத்தபட்ட தத்துவமே “சாஸ்தா எங்கும் செல்லமாட்டார் அங்கேதான் இருப்பார், அவர் குலதெய்வம் நாம்தான் சென்றுபார்க்க வேண்டும்” என்பது
இந்த குலதெய்வத்தின் புண்ணியத்தில் ஆண்டுக்கொரு முறை சந்த்தித்து தொடர்பற்று போகாத சொந்தங்களும்,குடும்பங்களும் உண்டு.
இந்த அறிவார்ந்த தத்துவத்தை கொடுத்துசென்ற முன்னோர்கள் எவ்வளவு நன்றிகடன் பட்டவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும்?
தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றும் இந்த பாரம்பரியத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு, தனது அடையாளம் தனது பூர்வீகம் இவற்றையெல்லாம் எக்காலத்திலும் தொலைத்துவிடாததின் சூட்சுமம்.
நெல்லை மாவட்டம் சித்தூருக்கு ஏராளமாவர்கள் வந்து இது எங்கள் குலதெய்வம் ஊர் என சொல்லும்பொழுது அது நன்றாக புரிகின்றது
இன்றைய உலகின் மிகசிறிய குழுவானாலும்,ஒட்டுமொத்த உலகையும் ஆட்டுவிக்கும் யூதர்களின் ஆன்ம வாக்கியம் “தன் மூதாதையர் வாழ்ந்த,உழைத்த,புதைத்த மண்ணை மறந்தவன் சபிக்கபடுவான்”.
அந்த வாக்கியம்தான் ஜெருசலேம் எனும் மந்திர சொல்லையும், அதனை காக்கவேண்டும் எனும் பரம்பரை வைராக்கியத்தியும் அவர்களுக்கு கொடுக்கிறது, வாழவைக்கிறது.
அந்த யூத வாக்கியத்தின் நமது ஆலய வடிவங்களே குலதெய்வம் குடியிருக்கும் குளத்துகரை பீடங்கள்,
ஆயிரமாயிரம் தத்துவங்கள் அதனில் அடங்கியிருக்கிறது
அனாதை இல்லத்தில் சேர்க்கபட்ட தாயை போன்ற நிலைமையில் உள்ள, அல்லது கவனியாது தெருவில் விட்ட குலதெய்வங்களும் உண்டு.
இதனை நினைக்கும்பொழுது அக்காலத்தில் கடல்போல நீர்நிரம்பிய குளங்களும், அதனை சுற்றி பசுமையான கழனிகளும்,மாட்டோடு மாடாய் உழைத்த முன்னோர்களின் நினைவுகளும் கண்களுக்குள் வந்து போகின்றது
.
அந்த குளங்களின் இன்றைய காட்சியும், வறண்ட வாய்கால்களயும், இன்று நடமாடும் மினரல் வாட்டர் பாட்டில்களையும்,ரியல் எஸ்டேட் கல்லையும், கம்பிவேலியையும் காணும் பொழுது ஒரு நீண்ட பெருமூச்சும்,விம்மலும் தானாக நெஞ்சை அடைக்கிறது.
அள்ளி,அள்ளி தந்த அந்த பூமி அன்னைகளுக்கெல்லாம் அன்னை, தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம்.
அந்த வறண்ட குளத்தின் ஓரமாக அமர்த்திருக்கின்றது கைவிடபட்ட சாஸ்தா ஆலயம்
அந்த தெய்வங்களை நினைவுகூர்ந்து வணங்குவதற்கு மதம் ஒரு தடையே அல்ல
காட்டை திருத்தி கழனியாக்கி நமக்கொரு அடையாளம் தந்த முன்னோர்களின் நினவுகளே போதும்.
பங்குனி உத்திரம் கொண்டாடும் அனைவருக்கும் முன்னோர்களின் நினைவுகளோடு வாழ்த்துக்கள்
எங்கள் ஊரில் இன்று பாழடைந்துவிட்ட ஒரு சாஸ்தாகோவில் முன்பு அமர்ந்திருந்தபொழுது வந்த நினைவுகள் நிறைய உண்டு
ஆம், எல்லோரும் அந்த வயற்காட்டை விட்டு சென்றாகிவிட்டது, குளமும் குளம் போலவே இல்லை, அந்த சாஸ்தாவிற்கான குடும்பத்தார் யாரும் வரவும் இல்லை.
அந்த சாஸ்தா கோயில் இருந்த அடையாளம் மட்டும் இருக்கின்றது
அதனை கடந்து செல்லும்பொழுதெல்லாம் வாழ்ந்து கெட்ட அனாதையாக சாலையோரம் அமர்ந்திருக்கும் பெரியவரை பார்க்கும் வலி வருகின்றது.
கைவிடபட்ட அனாதை முதியவர்களை எங்கு கண்டாலும் அந்த சாஸ்தாவின் நினைவு வந்துவிடுகின்றது, அதுவும் இந்த பங்குனி உத்திரநாளில் அதிகமாக வருகின்றது.
“தண்ணீர் இல்லை விவசாய வீழ்ச்சி என எல்லா மக்களும் போய்விட்டார்கள், நான் எங்கு செல்லமுடியும்? ” என அது கதறுவது போலவே தோன்றும்
உலகெல்லாம் பங்குனி உத்திர விழா நடக்க , நிச்சயம் அந்த சாஸ்தாவும் ஏங்கிகொண்டுதான் இருப்பார், இதனை போல் எத்தனை ஆலய சாஸ்தாக்கள் ஏங்குமோ தெரியாது.
விவசாய வீழ்ச்சி மக்களை மட்டுமல்ல, தெய்வங்களை கூட அனாதை ஆக்கியிருக்கின்றது.
அந்த வரப்பினை கடக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு அனாதை முதியவர் யாரையோ எதிர்பார்த்து பரிதாபத்துடம் அமர்ந்திருப்பது போல மனதிற்குள் ஒரு கலக்கம் வந்து போகின்றது..
இதுபோல எத்தனை அனாதை சாஸ்தாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன என நினைத்தால், எவ்வளவு தூரம் தமிழகம் தன் அடையாளங்களை தொலைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.
மதமாற்றம் வாழ்க்கை மாற்றம் என எத்தனையோ மாற்றம் நடந்தபின் அவைகளையும் மறந்தாயிற்று
விவசாயம் மட்டுமல்ல அதோடு அந்த தெய்வங்களும் மறைகின்றன, ஒருவேளை அந்த தெய்வங்களை மறந்ததால் என்னவோ பல இடங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன
ஆம் முதியோருக்காவது இல்லங்கள் உண்டு, விவசாயமும் குளங்களும் அழிந்துவிட்ட நிலையில் அந்த சாஸ்தாக்களுக்கு யாரும் இல்லை
அனாதை தெய்வங்கள் அவை, அவைகளை பற்றி கவலையுற யார் உண்டு?
சாஸ்தா ஆலயங்கள் முறையாக மீட்டெடுக்கபடும் பொழுது குளங்களும் ஏரிகளும் மீட்கபடும், அப்படி மீட்கபடும் பொழுது நீராதாரம் முழுக்க பாதுகாக்கபடும், அப்படி பாதுகாக்கபடும் பொழுது விவசாயமும் தொழிலும் இங்கு தானே வளரும்
தமிழகத்தின் மறுமலர்ச்சியும் நீராதாரத்தினை மேம்படுத்தி காக்கும் திட்டமும் சாஸ்தா கோவில்களை தேடி புதுப்பித்தல்தான் ஒளிந்திருக்கின்றது
சாஸ்தா ஆலயங்கள் ஒவ்வொன்றும் மீட்கபட்டு முழு பராமரிப்பில் வழிபாட்டில் கொண்டுவரபடும் பொழுது குளங்களும் ஏரிகளும் தானே மீளும், தானே நிரம்பும்
ஆச்சரியங்களின் தொகுப்பான இந்துமதம் ஒவ்வொரு காரியத்தையும் எவ்வளவு ஞானதுடன் செய்திருக்கின்றது, மானிட இனம் தொடர்ந்து நிலைக்க விவசாயம், ஆன்மீகம், நீராதாரம் எல்லாம் தொடர்ந்து வர, மானிட குலங்கள் தலைமுறை தலைமுறையாக உறவினை தொடர்ந்து வர அது எவ்வளவு நுணுக்கமான வலையினை பின்னியிருகின்றது?
சாமிக்கு படையல் என படைத்து உறவுகள் ஒன்றாய் உண்ண அது எப்படியெல்லாம் வழிகாட்டியிருக்கின்றது?
நீர் நிலைகளை காக்க அது எவ்வளவு அழகான விஷயங்களை உருவாக்கியிருக்கின்றது?
மிக சரியாக வானியல் கோள்கள் சஞ்சரிக்கும் காலம் பிரபஞ்ச சக்தியினை மானிடம் பெற்று கொள்ள அது எவ்வளவு உன்னதமான ஏற்பாட்டை வழிபாடு என செய்திருகின்றது?
இப்படி ஒரு ஞானமான அறிவான சமூகம் அக்காலத்தில் எங்குமே இல்லை, அந்த ஞானமிக்க , இயற்கையிலே இறைவனை கண்டு வணங்கி வாழ்ந்த, காலம் காலம் வாழ வழிசொன்ன அந்த முன்னோர்களை நினைத்து நன்றியுடனும் பெருமையுடனும் வணங்கி கொண்டிருகின்றது இந்து சமூகம்
தமிழகத்தின் ஆன்மீக எழுச்சி முதல் விவசாயம் தொழில்துறையின் எழுச்சி வரை சாஸ்தா ஆலயங்களின் பராமரிப்பில்தான் இருக்கின்றது, அதை முறையாக ஒவ்வொரு தமிழனும் செய்யும் பொழுது தமிழகம் தன் பொற்காலத்தை மீட்டெடுக்கும்
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவதால் தமிழகத்தில் ஒரு பலனுமில்லை அது வெற்று அரசியல், விவசாயிகள் வாழ்வு வளம்பெற ஒவ்வொரு ஊரிலும் கிராமத்தின் குளத்தருகே இருக்கும் சாஸ்தா ஆலயங்களுக்கு முதலில் தனி பட்ஜெட் போட வேண்டும்
மன்னர் காலத்தில் ஒவ்வொரு கிராமத்தின் விளைச்சலிலும் அந்த ஆலயங்களுக்கு பங்கு கொடுக்கபட்டன
குளமும் வயலும் சாஸ்தா சொத்து என கொண்டாடிய காலத்தில் அந்த பக்தியிலும் பயத்திலும் யாரும் குளத்தை ஆக்கிரமிக்கவில்லை, கால்வாய்களை ஆக்கிரமிக்கவில்லை, வயல்களின் வரப்பை தொடவில்லை
சாஸ்தாவுக்கு கட்டுபட்டு நின்ற சமூகத்தால் ஒழுங்கு இருந்தது, அங்கு கட்டுகோப்பும் காவலும் இருந்தது, வயல்கள் செழித்தன
என்று சாஸ்தா ஆலயங்கள் அழிய தொடங்கியதோ, என்று இந்து மன்னர்கள் வீழ்ந்து பிரிட்டிசாரும் அவர்களை தொடர்ந்து காங்கிரசும் திமுகவும் ஆள ஆரம்பித்து இந்த ஆலயங்களெல்லாம் பாழானதோ அன்று தொடங்கியது விவசாய வீழ்ச்சி
இந்து அறநிலையதுறை நியாயமான துறை என்றால் இந்த கிராமத்து ஆலயங்களையும் எடுத்து நிர்வகித்து செய்வன செய்திருக்கவேண்டும்
ஆனால் பெருங்கோவில் நிதியினை அரசு எடுத்து கோவிலை பாழாக்கவும் அப்படியே சிறிய ஆலயங்கள் அழியவும் உருவான அத்துறை இதையெல்லாம் செய்யாது
விவசாயம் மறுமலர்ச்சி பெற ஒவ்வொரு குளம் ஏரியில் அமர்ந்திருக்கும் சாஸ்தா ஆலயங்கள் பொலிவு பெற வேண்டும், அவை வாழ வாழத்தான் தமிழக விவசாயி வாழ்வான் இது சத்தியம்.
பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர்.
சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது.
நிலா களங்கமுள்ளது என கம்பன் முதல்,வைரமுத்துவரை பாடினாலும், பங்குனி உத்திர பௌர்ணமி களங்கம் இல்லாதது என்பது ஐதீகம்,சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் உத்திர நட்சத்திர அமைவிடத்தாலும் அந்த நிலவு சற்று கூடுதலாக ஒளிரும் என்பது வானியல் உண்மை.
இந்த மங்கள நாளில்தான் ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தது, சிவபெருமான் மன்மதனுக்கு உயிர்கொடுத்து காதலர் தினம் உருவாக அச்சாரமிட்டார், இன்னும் முருகபெருமான் வேல் எறிந்து சூரனின் மலையினை பிளந்தார் என ஏகபட்ட சிறப்புகள் கொண்டது இந்த பங்குனி உத்திரம்.
முருகபெருமானின் ஆலயங்கள் எல்லாம் இந்த விழா கொண்டாடடும், ஆனால் மிக சிறிய சாஸ்தா ஆலயங்களிலும் அது பெரும் விழாவாக கொண்டாடபடும்
நெல்லைமாவட்ட பகுதியின் மிகச்சிறிய ஊராக சித்தூர் இருந்த போதிலும் அப்பகுதியில் நடக்கும் மிக திருவிழாக்களில் சித்தூர் திருவிழா மிக பிரசித்தி பெற்றது.
இன்று மிகச்சிறிய ஊராக சுருங்கிவிட்ட சித்தூர், பண்டைய காலங்களில் குறிப்பிட்ட இடத்தினை பெற்றிருக்கவேண்டும், நம்பியாற்று பாசனம் மூலம் மக்கள் வசித்த மிக தொன்மையான இடம். பின்னாளில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலிருந்து அதன்பின் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் வந்தது,
(அன்று பெருக்கெடுத்து ஓடிய அந்த அறு எப்படியோ திசைதிரும்பியதில் பின்னர் வறண்டுவிட்டது )
திருப்பதி பக்கம் ஆந்திர பகுதி பெயர்களை கவனித்தால் சித்தூர், நாகலாபுரம், முத்துலாபுரம் என பல பெயர்கள் உண்டு, பின்னாளில் இந்த பகுதிக்கு வந்த அம்மக்கள் ஆற்றுபாசான பகுதிகளுக்கு அப்பெயரை பதித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றும் நாயக்கமன்னர்களால் உருவாக்கபட்ட ஏரிகளின்,குளங்களின் கரையிலுள்ள சாஸ்தா ஆலயங்கள் பெரும்பாலும் ஆந்திரசாயல் கொண்டவை.
நாயக்கர் காலத்தில் பல மக்கள் ஆரல்வாய் மொழி தாண்டி சேரநாட்டிற்கும் இன்னும் சிலபேர் பல இடங்கள்ளுக்கும் இடம்பெயர்ந்து சென்றார்கள் என்பது வரலாற்று உண்மை.
இந்த பங்குனி உத்திர திருவிழாவின் போது நாகர்கோவில் பகுதி மக்கள் அலைஅலையாக சித்தூர் ஆலயத்தில் மோதுவது அதனை உறுதிபடுத்துகிறது,
நாகர்கோயில் என்றல்ல நெல்லைநகர பகுதி மக்களுக்கும் குலதெய்வம் சித்தூர் சாஸ்தா.
தென்பகுதியின் பழமையான ஆலயங்களில் ஒன்று சித்தூர் தென்கரை மகராசன் ஆலயம், எல்லா சாதி மக்களும் அதனை எங்கள் குலதெய்வ ஆலயம் என கொண்டாடுவதுதான் தனி சிறப்பு, அவ்வகையில் ஆழ்ந்து கவனிக்கதக்கது.
சித்தூர் மூலவரின் சிலையின் சாயல் அப்படியே சபரிமலை அய்யப்பனை ஒத்திருப்பதை காணமுடியும், அந்த அளவிற்கு பழமையான சாஸ்தா ஆலயம்.
சாஸ்தா என்பவர் காவல்தெய்வம், குறிப்பாக நீர் நிலைகளின் அருகில் அவருக்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும், சில உபதேவதைகளோடு அமர்ந்திருப்பார். அவரவர் வலிமைக்கு தக்கபடி 1008 தேவதை, 108 தேவதை அல்லது ஆக கடைசியாக 21 உபதேவதை கொண்ட சாஸ்தாக்கள் உண்டு.
சாத்து எனும் தமிழ்சொல்லுக்கு சேர்ந்து இருப்பது என பொருள், பெரும்பாலும் ரத,கஜ, நாக, துதி பரிவாராங்களுடன் அமர்ந்திருப்பார். மிக கண்டிப்பாக நீர் ஆதாரங்களின் கரையில் மட்டும் இருப்பார், பஞ்சகாலங்கள் அவரை மட்டும் பாதிப்பதே இல்லை.
நாகர்கோவில் முகப்பில் பழையாற்றுகரையில் வீற்றிருக்கும் சாஸ்தா எளிதில் மறக்கமுடியாதவர்.
குளத்திற்கும் குளத்தினை நம்பி நடக்கும் விவசாயத்திற்கும் அவர்தான் காவல் தெய்வம், விவசாயம் வாழ்க்கைக்கு மூலம், விவசாயத்திற்கு சாஸ்தா மூலவர்.
சாத்தன் எனும் சொல்லுக்கு கூட்டத்தின் தலைவன் எனவும் பொருளுண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாஸ்தா எனும் சொல் சாத்தா என மாறி,பின்னாளில் சாத்தான் என மாறிற்று, அர்த்தமும் மாறிற்று.
மொழிமாற்றமும்,அடையாள மாற்றமும் எவ்வளவு பெரிய விபரீதத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு சாஸ்தா, சாத்தானாக மாறியதை தவிர பெரும் உதாரணம் சொல்ல முடியாது.
விவசாயம் பிசாசு தொழிலாக மாறி தொட்டவனை அழித்துவிடும் என நிலை வந்தபொழுது, மூலவர் சாஸ்தாவும் பலருக்கு வேண்டாத சாத்தான் என மாறிற்று.
சாஸ்தா எனும் தெய்வம் சாத்தான் என மாறி இன்று அரைகுறை கிறிஸ்தவர்கள் வாயில் சிக்கியிருப்பது இப்படித்தான்
இன்று பல குளங்கள் அழிந்தது அதோடு பல சாஸ்தா ஆலயங்களும் அடையாளமற்றது.
பங்குனி உத்திர நாளன்று, மறக்காமல் குலதெய்வழிபாடு செய்யவேண்டும் என முன்னோர்கள் வகுத்ததால், ஏராளமான மக்கள் குளக்கரைக்கு சென்று சாஸ்தா வழிபாடு செய்கின்றார்கள்., எல்லா தெய்வமும் வேறு இடங்களுக்கு மாற்றபடலாம், ஆனால் சாஸ்தா அந்த இடத்தில்தான் இருப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த குளமும் இந்த வயல்காடுகளும் தான் நம்மை வாழவைக்கிறது, நமக்கு பின்னால் நம் சந்ததிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது வந்து அப்பகுதிகளை பார்வையிட வேண்டும், ஒன்றாக பந்தியமர வேண்டும்,சொந்தங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பினை விட்டுகொள்ளமுடியாதபடி ஒரு சங்கிலி பந்தம் தொடர முன்னோர்களால் ஏற்படுத்தபட்ட தத்துவமே “சாஸ்தா எங்கும் செல்லமாட்டார் அங்கேதான் இருப்பார், அவர் குலதெய்வம் நாம்தான் சென்றுபார்க்க வேண்டும்” என்பது
இந்த குலதெய்வத்தின் புண்ணியத்தில் ஆண்டுக்கொரு முறை சந்த்தித்து தொடர்பற்று போகாத சொந்தங்களும்,குடும்பங்களும் உண்டு.
இந்த அறிவார்ந்த தத்துவத்தை கொடுத்துசென்ற முன்னோர்கள் எவ்வளவு நன்றிகடன் பட்டவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும்?
தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றும் இந்த பாரம்பரியத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு, தனது அடையாளம் தனது பூர்வீகம் இவற்றையெல்லாம் எக்காலத்திலும் தொலைத்துவிடாததின் சூட்சுமம்.
நெல்லை மாவட்டம் சித்தூருக்கு ஏராளமாவர்கள் வந்து இது எங்கள் குலதெய்வம் ஊர் என சொல்லும்பொழுது அது நன்றாக புரிகின்றது
இன்றைய உலகின் மிகசிறிய குழுவானாலும்,ஒட்டுமொத்த உலகையும் ஆட்டுவிக்கும் யூதர்களின் ஆன்ம வாக்கியம் “தன் மூதாதையர் வாழ்ந்த,உழைத்த,புதைத்த மண்ணை மறந்தவன் சபிக்கபடுவான்”.
அந்த வாக்கியம்தான் ஜெருசலேம் எனும் மந்திர சொல்லையும், அதனை காக்கவேண்டும் எனும் பரம்பரை வைராக்கியத்தியும் அவர்களுக்கு கொடுக்கிறது, வாழவைக்கிறது.
அந்த யூத வாக்கியத்தின் நமது ஆலய வடிவங்களே குலதெய்வம் குடியிருக்கும் குளத்துகரை பீடங்கள்,
ஆயிரமாயிரம் தத்துவங்கள் அதனில் அடங்கியிருக்கிறது
அனாதை இல்லத்தில் சேர்க்கபட்ட தாயை போன்ற நிலைமையில் உள்ள, அல்லது கவனியாது தெருவில் விட்ட குலதெய்வங்களும் உண்டு.
இதனை நினைக்கும்பொழுது அக்காலத்தில் கடல்போல நீர்நிரம்பிய குளங்களும், அதனை சுற்றி பசுமையான கழனிகளும்,மாட்டோடு மாடாய் உழைத்த முன்னோர்களின் நினைவுகளும் கண்களுக்குள் வந்து போகின்றது
.
அந்த குளங்களின் இன்றைய காட்சியும், வறண்ட வாய்கால்களயும், இன்று நடமாடும் மினரல் வாட்டர் பாட்டில்களையும்,ரியல் எஸ்டேட் கல்லையும், கம்பிவேலியையும் காணும் பொழுது ஒரு நீண்ட பெருமூச்சும்,விம்மலும் தானாக நெஞ்சை அடைக்கிறது.
அள்ளி,அள்ளி தந்த அந்த பூமி அன்னைகளுக்கெல்லாம் அன்னை, தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம்.
அந்த வறண்ட குளத்தின் ஓரமாக அமர்த்திருக்கின்றது கைவிடபட்ட சாஸ்தா ஆலயம்
அந்த தெய்வங்களை நினைவுகூர்ந்து வணங்குவதற்கு மதம் ஒரு தடையே அல்ல,
காட்டை திருத்தி கழனியாக்கி நமக்கொரு அடையாளம் தந்த முன்னோர்களின் நினவுகளே போதும்.
பங்குனி உத்திரம் கொண்டாடும் அனைவருக்கும் முன்னோர்களின் நினைவுகளோடு வாழ்த்துக்கள்
எங்கள் ஊரில் இன்று பாழடைந்துவிட்ட ஒரு சாஸ்தாகோவில் முன்பு அமர்ந்திருந்தபொழுது வந்த நினைவுகள் இவை….
எல்லோரும் அந்த வயற்காட்டை விட்டு சென்றாகிவிட்டது, குளமும் குளம் போலவே இல்லை, அந்த சாஸ்தாவிற்கான குடும்பத்தார் யாரும் வரவும் இல்லை..
அந்த சாஸ்தா கோயில் இருந்த அடையாளம் மட்டும் இருக்கின்றது
அதனை கடந்து செல்லும்பொழுதெல்லாம் வாழ்ந்து கெட்ட அனாதையாக சாலையோரம் அமர்ந்திருக்கும் பெரியவரை பார்க்கும் வலி வருகின்றது.
கைவிடபட்ட அனாதை முதியவர்களை எங்கு கண்டாலும் அந்த சாஸ்தாவின் நினைவு வந்துவிடுகின்றது, அதுவும் இந்த பங்குனி உத்திரநாளில் அதிகமாக வருகின்றது..
“தண்ணீர் இல்லை விவசாய வீழ்ச்சி என எல்லா மக்களும் போய்விட்டார்கள், நான் எங்கு செல்லமுடியும்? ” என அது கதறுவது போலவே தோன்றும்
உலகெல்லாம் பங்குனி உத்திர விழா நடக்க , நிச்சயம் அந்த சாஸ்தாவும் ஏங்கிகொண்டுதான் இருப்பார், இதனை போல் எத்தனை ஆலய சாஸ்தாக்கள் ஏங்குமோ தெரியாது.
விவசாய வீழ்ச்சி மக்களை மட்டுமல்ல, தெய்வங்களை கூட அனாதை ஆக்கியிருக்கின்றது.
அந்த வரப்பினை கடக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு அனாதை முதியவர் யாரையோ எதிர்பார்த்து பரிதாபத்துடம் அமர்ந்திருப்பது போல மனதிற்குள் ஒரு கலக்கம் வந்து போகின்றது…..
இதுபோல எத்தனை அனாதை சாஸ்தாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன என நினைத்தால், எவ்வளவு தூரம் தமிழகம் தன் அடையாளங்களை தொலைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது..
மதமாற்றம் வாழ்க்கை மாற்றம் என எத்தனையோ மாற்றம் நடந்தபின் அவைகளையும் மறந்தாயிற்று
விவசாயம் மட்டுமல்ல அதோடு அந்த தெய்வங்களும் மறைகின்றன, ஒருவேளை அந்த தெய்வங்களை மறந்ததால் என்னவோ பல இடங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன
ஆம் முதியோருக்காவது இல்லங்கள் உண்டு, விவசாயமும் குளங்களும் அழிந்துவிட்ட நிலையில் அந்த சாஸ்தாக்களுக்கு யாரும் இல்லை
அனாதை தெய்வங்கள் அவை, அவைகளை பற்றி கவலையுற யார் உண்டு?
அந்த அனாதை தெய்வங்களின் கண்ணீரோ வலியோ என்னமோ இவ்வருடம் ஒரு ஆலயத்திலும் பங்குனி உத்திர கொண்டாட்டமே இல்லை..