பசவண்ணா என்றொரு புரட்சியாளர்

இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா என்றொரு புரட்சியாளர் இருந்தார்

அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார்

பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள்

அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், சந்தேகமில்லை

இந்துமதத்தில் சில கொடுமைகள் நடந்த பொழுது சிவலிங்கத்தை முன்னுறுத்தி, லிங்காயத் என்ற சமயத்தை ஏற்படுத்தினார், எடியூரப்பா எல்லாம் அந்த வகை

ஒருவகையில் கன்னியாகுமரியில் விஷ்ணுவின் நாராயண வழிபாட்டை ஏற்படுத்தி, அதாவது இந்துவாக இருந்து இந்துபிராமண கொடுமையினை எதிர்த்த வைகுண்டருக்கு இந்த பசவண்ணாவே முன்னோடி

ஆனால் அவரை பற்றி அதிகம் பேசமாட்டார்கள் ஏனென்றால் பசுவண்ணா பெயர் அரசியலுக்கு பயன்படாது.

மகா முக்கியமாக அவர் பிராமணர்

அந்த சீர்திருத்த திருமணத்தில் அய்யர் கிடையாது, மந்திரம் யாகம் எல்லாம் கிடையாது. சம்பிரதாயம் கிடையாது, ஆனால் தாலி உண்டு, அதுவும் மணமகனின் கழுத்தில் மணமகள் கட்ட வேண்டும்

மற்ற திருமணங்களில் தாலி கட்டியபின்புதான் கணவன் மனைவிக்கு அடிமை, ஆனால் அந்த திருமணத்தில் தாலி கட்டும்பொழுதே அடிமை

எனினும் மிகசில இடங்களிலே இம்முறையில் திருமணம் நடக்கின்றது, அப்படி ஒரு திருமணம் சமீபத்தில் கன்னடத்தில் நடந்திருக்கின்றது

மணமகன் கழுத்தில் தாலிகட்டி அவன் 
தன் கணவாக வர பிச்சை போட்டு மூன்று முடிச்சும் போட்டிருக்கின்றாள் மனைவி

உலகம் இதை வித்தியாசமாக நோக்க, அன்றே பசுவண்ணா இதை எல்லாம் செய்திருக்கின்றார் என்ற வரலாறும் வருகின்றது

அம்பேத்கர் என்பார்கள் இன்னும் பலரை புரட்சியாளர் என்பார்கள், உண்மையில் பிராமணராக பிறந்து பெரும் புரட்சி செய்த பசவண்ணாவே வரலாற்றில் மிகபெரும் எடுத்துகாட்டு

ஆனால் அவர் இந்துமத அபிமானி என்பதாலும், பிராமணர் என்பதாலும் மாற்றுமதங்களை தூக்கிபிடிக்கவில்லை என்பதாலும் அவரை கவனமாக மறைப்பார்கள்

பெண் விடுதலையினை அவளே தாலிகட்டும் உரிமைவரை கொடுத்த அந்த பசவண்ணா பெரும் போராளி என்பதில் சந்தேகமில்லை