பஞ்சாபில் பாஜக…
கொஞ்ச நாளாக சோர்ந்திருந்த பாஜகவிற்கு பஞ்சாப் அமைச்சர் ஒருவர் அட்டகாசமான உற்சாகம் கொடுத்துவிட்டார்
அதாகபட்டது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது, பாலிடெக்னிக் ஆசிரியர்களை நியமிக்க அமைச்சர் சரண்ஜித் சிங் முடிவு செய்யவேண்டிய நேரம், இருவர் சம தகுதியுடன் ஒரே இடத்திற்கு தேர்வாக வந்திருக்கின்றார்கள்
அமைச்சர் யோசித்திருக்கின்றார், தேர்வுகளிலும் தகுதியிலும் இருவரும் சரிக்கு சமம் என்ன செய்யலாம் என்றவருக்கு கிரிக்கெட் அம்பையர் நினைவு வந்திருக்கின்றது
சட்டென டாஸ் போட்டு பூவா? தலையா? விளையாடி அதில் வென்றவருக்கு வேலை என முடிவு செய்து விளையாடியும் இருக்கின்றார்
இது தனியாக அறையில் செய்தாலே வில்லங்கம், இவரோ பலர் முன்னிலையில் செய்ய விஷயம் வீடியோ என தூள்பறத்துகின்றது
சர்தார்ஜி ஜோக் எல்லாம் உண்மைதான் போல என ஒரு கூட்டம் கிளம்பிற்று, அப்படியும் அமைச்சர் நான் செய்தது சரி என பேசகிளம்ப, பாஜகவிற்கு மகா உற்சாகம்
ஏன் இப்படி செய்தீர் என அவர்கள் கேட்க, மறுபடியும் அமைச்சர் நான் சிரொன்மணி அகாலிதள ஊழலை ஒழித்தேன் என சம்பந்தம் இல்லாமல் பேச, பாஜக கோஷ்டிக்கு மகா உற்சாகம்
ஆளாளுக்க்கு பாஜக கோஷ்டி கலாய்த்து களைகட்டுகின்றது, இவரை எல்லாம் வைத்து.. என்பது போல ராகுல் தலைமீது கைவைத்திருக்கின்றார்
ஆக தமிழக அமைச்சர்கள் போல, சில மத்திய அமைச்சர்கள் போல, பஞ்சாபிலும் சிலர் இருக்கின்றார்கள்
இனி அடுத்து “பிங்கி பிங்கி பாங் கீ” விளையாட போகும் அமைச்சர் யாரென கண்டுகொள்ளும் பெரும் ஆவலில் தேசமக்கள் இருக்கின்றார்கள்