படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?
ரன்சம்வேர் வைரசிலிருந்து பாதுகாக்க ரஷ்ய உச்ச மதகுரு கம்பியூட்டர் சர்வர்களுக்கு எல்லாம் புனித நீர் தெளிக்கின்றாராம்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு இப்படித்தான் அங்கு நிலை இருந்தது, மத குருமார்கள் சட்டமே உச்சமாக இருந்தது, லெனினும் ஸ்டாலினும் அதனை தகர்த்துதான் 1917ல் கம்யூனிச ரஷ்யா அமைத்தார்கள்
தேவாலயம் எல்லாம் நூலகமாக, உணவகமாக மாற்றபட்டன, சாமியார்கள் எல்லாம் வேலைக்காரர் ஆக்கபட்டார்கள்.
விண்வெளி வரை சென்று தேடியும் கடவுளை காணவில்லை என்றார்கள் ரஷ்யர்கள்
அடுத்த 100 ஆண்டுகளுக்குள் எப்படி மறுபடியும் சாமியார்கள் கையில் ரஷ்யா சிக்கிகொண்டது பார்த்தீர்களா?
இதற்குத்தான் குருச்சேவ் சொன்னார், போப்பாண்டவரை கொன்றாவது கிறிஸ்துவத்தை ஒழிப்போம், இன்றும் தலாய்லாமாவினை ஜெயா வீட்டு வேலைக்காரனை தமிழக மர்ம கும்பல் துரத்துவது போல சீனா துரத்திகொண்டிருக்கும் காரணம் இதுவே
ஒரு நம்பிக்கை வருகின்றது
ஆனானபட்ட ரஷ்யாவே 100 ஆண்டுகளில் இப்படி மாறிவிட்ட பின், இந்த சீனா மாற எவ்வளவு காலமாகும், சும்மாவே அவர்களுக்கு பேய் பிசாசு பயம் ஜாஸ்தி, ஒருநாள் அந்த தேசமும் நிச்சயம் மதபிடிக்கு மாறும்
ஒரு விஷயம் புரிகின்றது, மோசமான வறுமையில் நாத்திகம் மலர்கின்றது, அதில் பொதுவுடமையும் வருகின்றது
ஆனால் , பின்னர் செழுமை வந்தபின் கடவுளும் வந்துவிடுகின்றார்., நாத்திகம் வெளியேறுகின்றது
ரஷ்ய திருப்பம் அதனைத்தான் சொல்கின்றது
எப்படியோ பாத்திமா நகரில் தேவமாதா சொன்ன காட்சி நிறைவேறிற்று…