பட்ஜெட் : இதுவரை சொன்ன எதனை செய்திருக்கின்றார்கள்?

கடைசி பட்ஜெட்டிலும் உண்மை சொல்ல கூடாது என கங்கணம் கட்டி தயாரித்திருக்கின்றார்கள்

ஏற்கனவே சொன்ன எந்த விஷயமும் நடைபெறாத நிலையில், உலகெல்லாம் சென்று மோடி கதவை தட்டினாலும் ஒரு மாற்றமும் வராத நிலையில், தடுமாற்றமான கொள்கைகளால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கபட்டிருக்கும் நிலையில் பட்ஜெட் உரையில் நாங்கள் அடிபடவே இல்லை என வலிக்காமல் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

நாட்டை பெரிதும் சீரழித்துவிட்டு பொருளாதாரத்தில் வளர்த்தோம், விவசாயத்தில் கிழித்தோம் என சொல்வதை கண்டால் பரிதாபமும் கோபமும் சேர்ந்தே வருகின்றது.

போகிற போக்கிலும் இந்தியில் வாசிப்போம் என்ற அழிச்சாட்டியம் மட்டும் செய்ய தவறவில்லை

இதுவரை சொன்ன எதனை செய்திருக்கின்றார்கள்? ஒன்றுமே இல்லை எல்லாம் ஏட்டோடு சரி, இந்த பட்ஜெட் என்ன ஆயிற்று என கேட்க அடுத்தவருடம் அவர்கள் அங்கு இருக்கவா போகின்றார்கள்?

நிச்சயம் இல்லை

அதனால் என்னவெல்லாமோ பேசுகின்றார்கள், இயற்கை வளங்களை ஏலமிட வெளிப்படையான நிர்வாகமாம், அம்பானிக்கு எப்படி கோதாவரி பகுதி எரிவாயு டென்டர் கிடைத்தது என்றால் சத்தமிருக்காது

எல்லாம் பசப்பு நிறைந்த குழப்ப வாங்கியங்கள், ஆரம்பத்தில் இவர்கள் விட்ட சவால் என்ன? இன்று சாதித்திருப்பது என்ன என்றால் சொல்ல அவர்களிடம் ஒன்றுமே இல்லை

ரபேல் விமானத்திலே பல்லாயிரம் கோடிகளை நஷ்டபடுத்தியவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இவர்களிடம் பட்ஜெட் பற்றி எல்லாம் யார் எதிர்பார்த்தார்கள்? நள்ளிரவில் திடீரென வீட்டுக்கு தீ வைப்பார்கள் அல்லவா? அதுதான் பயம்

அப்படி கடைசி நள்ளிரவு தீயினை ஏற்றாமலே இந்த ஆட்சி கடந்து போகட்டும்