பட்டினத்தார்

பட்டினத்தார் என்றொருவர் இருந்தார். நகரத்தார் எனும் பூம்புகார் செட்டியார். பெரும் பணக்காரர். சொத்து இருக்குமிடத்தில் சொந்தம் வரும், அது சுருட்டவும் வரும்.

கிட்டதட்ட எம்.ஏ ராமசாமி செட்டியார் போல மனம் வெறுத்த பட்டினத்தார் துறவியானார். ஞானம் பெற்றார், தத்துவமும் திருவோடுமாக அலைந்தார். ஒரு கட்டத்தில் இந்த திருவோடும் மீதும் எனக்கு ஆசை வந்ததே என சொல்லி தூர எறிந்தார்.

வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கசப்பு என பொருளில் கரும்பினை கையில் சில நேரம் வைத்து தத்துவம் சொன்னார். பெண்ணாசையால் கெட்ட பத்ருஹரி எனும் மன்னனும் துறவியாகி அவரோடு சேர்ந்தான்

அவனுக்கு அவர் போதித்த பாடலே பட்டினத்தார் பாடல்கள், நன்கு அதனை படித்தால் சிம்புவும், தனுஷும் ஏன் கமலஹாசனே திருந்த வாய்ப்பு உண்டு. அப்படியான பாடல்கள் அவை

சிவனடியாரான அவர் பின் சென்னையில் மரணித்தார். அவர் கல்லறை இன்றும் அங்கு உண்டு

உண்மை இப்படி இருக்க, அவர் வரலாறை கண்டபடி திருத்தி அவர் வீம்புக்கு செத்தவர். உறவினரால் கொல்லபட்டவர். இந்த பிராமணர்கள் அவர் கதையினை திருத்திவிட்டனர் என ஒரு கும்பல் கிளம்பியிருக்க்கின்றது

இது வன்மையாக கண்டிக்கதக்கது.

பட்டினத்தார் சிவனடியார் என்பதற்காக அவர் கதை பிராமணர்களால் திருத்தபட்டது என்பதெல்லாம் அபத்தம். ஏன் பிராமணனை தவிர எவனுக்கு சிவபக்தி வரகூடாதா? எந்த தமிழனுக்கும் இந்து எனும் அடையாளம் இருந்துவிட கூடாதா?

எதற்கெடுத்தாலும் பிராமணன், பிராமணன் என சாடுவது ஒரு மனநோய். தமிழகம் இந்து நாடாகத்தான் இருந்தது, சிவன் அதன் பிராதன கடவுள். சைவம் இங்குதான் செழித்தது.

ஆக எல்லாமே பிராமண சூழ்ச்சி என சொல்லிகொண்டிருப்பது ஒரு வகையான மனநோய், ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அந்த மனநோயாளிகள் பழம் வரலாறுகளை, தத்துவ இதிகாசங்களை குழப்பாமல் இருக்கட்டும்.