பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்
மோடியினினை மன்னிப்பு கேட்க சொல்லும் இவர் என்ன நெல்சன் மண்டேலா வகையறாவா?
எவ்வளவு பொய்கள்? எவ்வளவு அழிச்சாட்டியம்?
முத்துராமலிங்க தேவர் முதல் பெரியார் வரை எத்தனைபேரை சுமந்துவிட்டு குப்புற வீசிய துரோகம்
அந்நிய நாட்டு தீவிரவாத கும்பலுக்காக கொடி பிடித்த தேச துரோகம்
இன்னும் எத்தனையோ பிராடுகள், இந்தியா பற்றி இல்லா பொல்லா பொய்கள் என அவிழ்த்துவிட்ட இவர், பாரத நாட்டின் நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுத்த மோடியினை மன்னிப்பு கேட்க சொல்கின்றாராம்.
அடிக்கடி கத்தும் சீமான், சசிகலா மீதான மத்திய அரசின் சில நடவடிக்கைகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாகிவிட்டார் என்பதுதான் புரியவில்லை
எப்படியோ மோடியினை இப்படி மன்னிப்பு கேட்க சொல்லும் சீமானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது, தமிழிசை ஏன் இன்னும் அமைதி என தெரியவில்லை.
பாலா, திருமுருகன் காந்தி என யாரையெல்லாமோ பிடித்து உள்ளே போடும் அரசு இந்த நபரை ஏன் விட்டு வைத்திருக்கின்றது?