பண்டிகை என்றால் பட்டாசுகள் தான்

No automatic alt text available.பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது

இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது

பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது

இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை கெடுப்பதற்காகவே சொல்லபடுபவை

எல்லா வகை காசு மாசையும் தடுத்தபின்புதான் பட்டாசு பக்கம் வரவேண்டுமே தவிர, ஒரே காரணம் பட்டாசு அல்ல.

மக்களின் நியாயமான சந்தோஷங்களை கெடுப்பது சரி அல்ல, ஏற்றுகொள்ள கூடியதும் அல்ல‌

குறிப்பாக குழந்தைகள் அந்த பட்டாசுகளை மிக ரசிப்பவர்கள். தீபாவளியினை அவர்கள் எதிர்பார்ப்பதே அந்த குதூகலத்திற்குத்தான், அதற்காகத்தான்

அந்த மனதை நோகடித்துவிட்டு, அவர்களை ஏமாற்றிவிட்டு யாருக்காக இச்சமூகம் தீபாவளி கொண்டாட போகின்றது

வரவர இத்தேசத்தில் ஒரு பண்டிகை கூட நிம்மதியாக மக்கள் கொண்டாட கூடாது என சிலர் நினைப்பார்கள் போல‌

எல்லா பண்டிகைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கிளம்பிவிடும் கூட்டம் அதிகரிக்கின்றது

இப்படிபட்டவர்களை அனுமதிப்பது சரியல்ல‌

தீபாவளி அதனின் உற்சாகத்தோடு கொண்டாடபட பட்டாசுகள் அவசியம் தேவை. ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் இந்நாடு ஒன்றும் அழிந்துவிடாது.

குழந்தைகளின் மகிழ்விற்காக அந்த பட்டாசு அனுமதிக்கபட்டே தீரவேண்டும்.

குழந்தைகளை கூட மகிழ்ச்சியாய் இருக்க விடாத சமூகம் எப்படி உருப்படும்?

மத்தாப்பும், சக்கரமும் இன்ன பிற விஷயங்களும் குழந்தைகள் விளையாட்டு உரிமை. ஆண்டுக்கு ஒருமுறை விளையாடுகின்றன‌

அவற்றை தடுப்பதில் யாருக்கு உரிமை இருக்கின்றது?

(தேர்தல் வெற்றி, பிரச்சாரம், தலைவர்கள் வருகை , பட ரிலீஸ் போன்றவற்றில் போடபடும் பட்டாசுகளை தடை செய்வது பற்றி எவனும் பேசுவதாக தெரியவில்லை)