பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று
பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று, இப்பொழுது கூட “கமுதி பஸ்ஸ்டாண்ட்டுக்கு வாடா..” என புறா விடு தூது எல்லாம் அனுப்புகின்றார்கள்
நாதக, திக, திமுக ஸ்டாலின் அணி, அதிமுக எல்லா அணி, பக்தாள், தலித் சங்கம், பிராமணாள் சங்கம் , தமிழிசை கோஷ்டி என ஒரு இடம் பாக்கியில்லாமல் பகை வந்தாயிற்று.
பிரிவினை கிறிஸ்தவர், இஸ்லாமியர், சில இந்துக்கள் எல்லாம் ஓன்றாக அடிக்க வரும் அற்புத காட்சியெல்லாம் தெரிகின்றது.
இதில் அஜித், விஜய், ராமசந்திரன் கோஷ்டிகளும் இணையலாம்
நம்மை போட்டு சாத்த மட்டும் இவர்கள் எல்லாம் ஓரணியில் திரளுவார்கள் போல, அவ்வளவு கோபம் இருப்பது போல் தெரிகின்றது.
ஊருக்கு வருவது பற்றி பலமுறை யோசிக்க வேண்டியிருக்கின்றது
என்ன செய்யலாம்? ஆம் அதேதான்
வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணம் மேற்கொள்ள வேண்டியதுதான்
கொழும்பு வழியாக பெங்களூர் வந்து, கன்னத்தில் மரு வைத்துகொண்டு, கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு, தலையில் தொப்பி போட்டு கொண்டு சென்னைக்கு வரவேண்டியதுதான்.
இதனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இத்திட்டத்தை முன்பே சொல்லி வழிகாட்டிய அங்கிள் சைமன் வாழ்க
அதானே, பெரியாரின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உங்களிடம் இருக்கும் வரை உங்களுக்கு என்ன குறை?
அந்த சொத்துக்களை விட்டுவிட்டு பகுத்தறிவு பேசுங்கள் பார்க்கலாம்?