பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்

Image may contain: 1 person , sunglasses and close-up

சோகத்தின் மேல் சோகம் சூழும் நேரம்

பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை அவர்தான் தொடங்கி வைத்தார்

நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர்

திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது

எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் நாட்டுபற்று

திராவிட போலிகள் பிரிவினை வாதம் அது இது என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது அவர் மத நம்பிக்கை பேசினார்

அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றவர்கள் பின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது

அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது, இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார்

இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதில் எந்த பகுத்தறிவாளனிடமும் இல்லை

புலிகளை தமிழகம் கொண்டாடிய போது 1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியமாக அவர்களை எதிர்த்து எழுதினார்

அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை கண்டித்து எழுதினார்

பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர்

மிக சிறந்த பத்திரிகையாளனை நாடு இழந்திருக்கின்றது, தமிழகம் ஒரு மாணிக்கத்தை இழந்திருக்கின்றது

கலைஞரை அரசியல் சாணக்கியன் என்பார்கள், சாணக்கியன் இன்ன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான் சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான்

அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த ஜெயலலிதா, இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிகொடுத்த எழுத்துக்கள்

வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார்

எத்தனை அரசியல் பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக் இடமே தனி

இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான்

கலைஞரை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள், இன்றும் பாருங்கள் அஞ்சலி செலுத்த கலைஞர் செல்லலாம்.

சோவின் ஏராளமான நகைச்சுவை தெறிப்புகள் வந்து போகின்றன,

தமிழுணர்வை இப்போது வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என அவர் சொன்னபொழுது சிரிக்காதோர் யாருமில்லை

இன்னும் ஏராளமான பேட்டிகள், கவிஞர் கனிமொழி பற்றி என கேட்ட்பொழுது “நானும் மனோரமாவுடன் சேர்ந்து ஆடிய நடனங்களுக்கு நானே பாடெழுதியிருக்கேன் ஸ்ஸ்க்கு ஸ்ஸ்கு இஸ்கானா என , என்னையும் கவிஞர் என அழையுங்கள்” என அவர் சொன்னபொழுது புன்னகைக்காதோர் யார்?

ஏராளமான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாதங்கள், குறும்பான பதிகள்

இறுதி பேட்டிகளில் அவரிடம் கேட்டார்கள், காங்கிரசினை கண்டிப்பவர் நீங்கள், தற்போதைய காங்கிரசின் பின்னடைவினை எப்படி காண்கின்றீர்கள்?

சோ சொன்னார்

“காங்கிரஸ் பின்னடைவது நாட்டிற்கு நல்லதல்ல, தேசிய ஆளும் கட்சிக்கு ஒரு தேசிய கட்சி எதிர்கட்சியாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது”

இதுதான் சோ

தமிழகத்தில் இது ஒரு வகையான உதிர் காலம்

பெரும் மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் வெற்றிடம் உருவாகிகொண்டிருக்கின்றது

அம்மரங்களில் இளைபாறிகொண்டிருந்த பறவைகள் எல்லாம் கதறிகொண்டு எதிர்காலம் தெரியாமல் கலங்கி திரிகின்றன‌

நம் மனங்களின் கலக்கம் போல‌

ஆழ்ந்த அஞ்சலி எங்கள் ராஜகுருவிற்கு

நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு , நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதனை சொல்லி சென்றதற்காக நன்றிகள்

போலி பகுத்தறிவாளர்களை நார் நாராக கிழித்து காட்டியதற்காய் நன்றிகள்

அடிக்கடி சித்திர குப்தன் வேடத்தில் சினிமாவில் எமனை கலாய்த்தீர்கள், நன்றாக கலாய்த்தீர்கள்

இப்பொழுது அவனிடமே சென்றிருக்கின்றார்,

எமலோகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்

நாமெல்லாம் கதறிகொண்டிருக்கின்றோம்

இதயம் கனத்த அஞ்சலிகளுடன் வழி அனுப்புகின்றோம்


தங்கபதக்கம் படத்தின் காமெடிகாட்சிகளை மறுமுறை பார்க்கவேண்டும்

திமுகவினரை அதனை விட ஒரு காட்சி கலாய்த்துவிட முடியாது

“அப்பாயிசம் தெரியுமா”

“அண்ணா அண்ணாணு சொல்லி என் பெயரையே கெடுத்தியடா”

“ரூபாய்க்கு 3 கிளி”

“அமெரிக்கா, ரஷ்யாவிற்கு நான் சவால் விடுகின்றேன், இந்த வைகை வளவனையா யார் என கேட்டீர்கள்”

“குழந்தை மேல கார் ஏத்தி கொன்னதுக்கு கேஸா, இவன் குழந்தைக்கு அப்பனா? அக்குழந்தை வந்து இவன் அப்பன் என சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்”

“என் கட்சிக்காரன் கத்தியால் குத்தி குடல் வெளிவந்தால் , அந்த குடலை கைது செய், என் கட்சிக்காரனை எப்படி பிடிக்கலாம்”

“இது கறைபடாத கை, பணத்தை என் கட்சி நிதிக்கு மட்டும் கொடுங்கள்”

# சோ நினைவில் நிற்கின்றார்


கலைஞரை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், கொஞ்சம் உடல் ஒத்துழைத்தாலும் இந்நேரம் சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றிருப்பார்.

அவரை காரி துப்பியவர்கள் மரணத்திற்கு கூட நேரில் அஞ்சலி செய்யும் பெரும் பண்பு அவரிடம் உண்டு, பாராட்டபட வேண்டிய பண்பு அது.

அவர் அங்கு செல்லாதது ஒரு வித அச்சத்தை கொடுக்கின்றது.

கலைஞர் உடன்பிறந்தோர் எல்லாம் அசால்ட்டாக 98 வயதினை தொட்டவர்கள், கலைஞரும் நலம் பெற்று திரும்ப வருவார்.


பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை சோ இராமசாமி : சீமான் அஞ்சலி

பிரபாகரனையும் புலிகளையும் சோ கிழித்த கிழி என்ன?, பிரபாகரன் இருக்கும்வரை அங்கு நிம்மதி இல்லை என அவர் எழுதியதென்ன?

புலிகள் ஒழிக்கபட்டே ஆகவேண்டியவர்கள் என சொன்ன தைரியம் என்ன?

இறுதி போரினை நியாயபடுத்திய விதம் என்ன? போருக்கு பின் தமிழர்கள் நிம்மதியாக வாழுகின்றார்கள் என எழுதிய கட்டுரை என்ன?

சோவினை விட ஒரு பெரும் எதிரி தமிழகத்தில் புலிகளுக்கு இருக்க முடியுமா?

அது எப்படி சீமான் கொஞ்சமேனும் வெட்கமில்லாமல்…….