பத்திரிகை பணி எளிய மக்களின் மேல் மட்டும்தான்

அழகி, உல்லாசம், இன்பம், செக்ஸ் டாக்டர், வெறி என புது புது தமிழ்வார்த்தைகளை எல்லாம் தமிழருக்கு கொடுத்தது தினதந்தி

ஆனால் பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் அதன் வழக்கமான அடைமொழிகளை எல்லாம் காணவே இல்லை

இதுவே வேறு இடத்தில் நடந்தால் புலனாய்வு, பொயாய்வு என இட்டுகட்டி , ஸ்கூப் அடிக்கும் பத்திரிகைகள் எல்லாம் ராமதாஸ் பகிரங்கமாக நிர்மலா ஏன் பல்கலை கழக விழாவில் விலை உயர்ந்த சூட் அறையில் தங்கினார் என கேட்ட பின்னும் அமைதி காக்கின்றன‌.

இதுவே அப்பாவி பெண் என்றால், கேட்க ஆளில்லா பெண் என்றால் இந்நேரம் கதைகள் மர்லின் மன்றோ அளவுக்கு வந்திருக்கும்

இந்த டிவியில் வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும், தமிழக பத்திரிகைகளுக்கும் ஒரு வித்தியாசமில்லை

பத்திரிகை இவர்களின் பணி எளிய மக்களின் மேல் மட்டும்தான், அதிகாரம் இருக்குமிடமெல்லாம் மூச் கூட விடமாட்டார்கள்.