பன்னீர் துளிகள் … (10 பதிவுகள்)
100 சதவீதத்தில் 10 சதவீதம்தான் பேசியிருக்கின்றேன்: ஒ.பன்னீர்செல்வம்
இது என்ன சசிகலாவிற்கு மிரட்டல் விடுக்கும் அறிவிப்பு?
அந்த மீதி 90% விஷயத்தையும் மக்களிடம் சொன்னால்தான் என்ன?
முழுவதுமாக சொன்னால்தானே இவர் 100% தமிழக மக்களின் முதல்வர், இல்லையென்றால் 10% மக்களுக்கான முதல்வர் ஆகிவிடமாட்டாரா?
ஏம்பா டிவி நாட்டாமைகளா, ஒரு மாநில முதல்வர் அழுதுகொண்டிருக்கின்றார்
எவனாவது பேட்டி எடுக்க தயாரா இல்லையா?
மிஸ்டர் பாண்டே , பன்னீர்செல்வத்தை
ஒரு பேட்டி எடுத்து நேரலையாக ஒளிபரப்பினால் என்ன?
மற்ற டிவி அறிவுஜீவிகளை காணவே இல்லை, பரபரக்கின்றார்களே தவிர அவரை அழைத்து அவரின் அழுகையினை தமிழகம் முழுக்க பரப்ப ஒருவனும் இல்லை
சசிகலா புஷ்பா என்றால் மட்டும்தான் அண்ணாச்சி டிவி ஒளிபரப்பும் போல, அதே குற்றசாட்டை மாநில முதல்வரே சொன்னால் சத்தமே இல்லை, அவரை பேட்டி எடுத்தால்தான் என்ன?
எல்லா டிவியும் சசிகலா சொன்னதையே சொல்கிறானே அன்றி, பன்னீர் பக்கம் உள்ள நியாத்தினை சொன்னதாக தெரியவில்லை
ஆக எல்லா டிவியும் லண்டன் டாக்டர் போன்ற மோன நிலைக்கு சென்றுவிட்டது.
வழக்கம் போல ஜெயாடிவி செவ்வாய்கிரகத்தில் இருப்பது போன்ற நிலைக்கு சென்றுவிட்டது, அதே எம்ஜிஆர் பாடல், அவர்கள் உலகமே தனி.
பன்னீருக்கு பின்னால் திமுக உள்ளது, சட்டமன்றத்தில் பன்னீர் ஸ்டாலினோடு சிரித்து பேசினார் : சசிகலா
அப்பல்லோவில் ராசாத்தி அம்மாளோடு இவர் அழுதால் அது சரி, பன்னீர் சிரித்தால் தவறு
பன்னீருக்கு பின் திமுக இருந்தால் என்ன டி.ராஜேந்தர் கட்சி இருந்தால் என்ன? பச்சைமுத்து கட்சி இருந்தால் என்ன?
(அப்படியும் பன்னீருக்கு பின்னால் பிஜேபி இருக்கின்றது என சொல்ல சசிகலாவிற்கு தைரியம் இல்லை 🙂 )
பன்னீருக்கு பின்னால் யார் இருந்தாலும் அது தமிழகத்திற்கு நன்மையே, அது யாராய் இருந்தாலும் சரி.
பதவியே வேண்டாம் என நின்றிருந்தார் மகாத்மா காந்தி.
காந்தியின் சம்பந்தி என்ற இமேஜினை தன் அரசியலுக்கு கொஞ்சமும் பயன்படுத்தவில்லை ராஜாஜி
அரசியலுக்கே வரமாட்டேன் என பிடிவாதமாக ஜெயித்தார் பெரியார்.
“தம்பி வா தலமையேற்க வா..” என தனக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களை ஊக்குவித்தவர் அண்ணா
பக்தவச்சலத்திடம் அட்சியினை ஒப்படைத்துவிட்டு இறங்கினார் காமராஜர்
அப்படியும் ஒரு காலம் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கின்றது
இன்றோ பதவியினை கொடு என மிரட்டி மாநில முதல்வரையே மெரினாவில் கண்ணீரோடு ஓடவிடுகின்றார்களாம்.
தமிழக அரசியல் எவ்வளவு சீரழிந்துவிட்டது..!
இப்பொழுதும் பெரும் பலம் கொண்ட எதிர்கட்சியாக, ஆட்சியினை நிர்ணயிக்கும் கட்சியாகத்தான் திமுகவினை இருத்திவிட்டு கலைஞர் ஓய்வெடுக்க போயிருக்கின்றார்
இனி திமுக உதவியோடு பன்னீர் பெரும்பான்மை நிரூபிப்பாரா? அல்லது அதில் தோற்று தேர்தல் வருமா? எனும் நிலைக்கு சென்றிருக்கின்றது நிலை
இறுதி காலத்திலும் பெரும் பலத்தினை திமுகவிற்கு கொடுத்துவிட்டுத்தான் ஓய்வில் இருக்கின்றார் கலைஞர்
இப்படி இனி எந்த அரசியல்வாதி சாத்தியம்?
ஜெ. உடல்நிலை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன்: ஒ.பன்னீர்செல்வம்
இவ்வளவு நாளும் இதனைபற்றி பேசாத பன்னீர்செல்வம் பேசுகின்றார் என்றால் ஆக ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என்பது உண்மை.
அதுவும் ஒரு முதலமைச்சர் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் ஜெயாவின் மிகுந்த நம்பிக்கைகுரிய தலைவர் என்றளவில் பன்னீர் செல்வத்தின் வார்த்தைகள் கவனிக்கபட வேண்டியவை
டெல்லி ஏய்ம்ஸ் டாக்டர்கள் இன்னும் வாய்திறக்காததும், அவர்கள் அறிக்கை முழுவதுமாக வராததும் மர்மத்தை கூட்டுகின்றன
கமிஷன் அமைக்கபட்டால் அது வரவேற்கதக்கதே.
ஆனால் கமிஷன் அமைப்பது எளிது, அதன் முடிவுகள் வெளிவருவதுதான் இந்தியாவில் பெரும் சிரமம்.
முதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான்
ஆமாம், பன்னீர்செல்வம் சீமான் போல் அல்லாமல், மனசாட்சிக்கு பயந்து உண்மையினை பேசியுள்ளார்.
சசிகலாவினை வரவேற்று ஒரு பல்டி அடித்துவிட்டு இப்பொழுது ரிவர்ஸ் பல்டி எப்படி அடிக்கின்றார் பார்த்தீர்களா?
இதுதான் அங்கிள் சைமன்,
யாரோ ஒருவர் சரியும் இடமெல்லாம் சீமானும் சரிகின்றார், அன்னாரின் தை பூச முழக்கம் இப்படி இருக்கலாம்,
தமிழ் முதலமைச்சர் பன்னீர் வாழ்க, வெற்றிவேல் வீரவேல் வாழ்க,
Vetri Vel Veera Vel வாழ்க.
அதாவது சுருக்கமாக V V வாழ்க
அரசியல் சூழ்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: போலீசார்
இந்த வதந்திகளை 4 மாதமாக பரப்பிகொண்டிருப்பதே போயஸ் கார்டன் கும்பல்தான். கொஞ்ச செய்திகளா சொன்னார்கள்?
எத்தனை முரண்பாடுகள்
இன்றுவரை அவர்கள் சொல்லி கொண்டிருப்பதுதான் வதந்தி, அதிலும் முதலிடம் ஜெயா டிவிக்கு
வதந்திகள் தடுக்கபடவேண்டுமானால் ஜெயா டிவியினைத்தான் தடுக்கவேண்டும். சசிகலா பற்றி அது சொல்லிகொண்டிருக்கும் வதந்திகள் கொஞ்சமல்ல
சி.ஆர் சரஸ்வதியும் நாஞ்சில் சம்பத்தும் இன்னும் பல அல்லக்கைகளும் அள்ளிவிடும் வதந்திகள் கொஞ்சமா?
போதா குறைக்கு லண்டனில் இருந்து வேறு வதந்தி.
அதனை விட்டுவிட்டு சும்மா பேசி கொண்டிருப்பவர்களை எல்லாம் போலிஸ் கைது செய்யுமாம்.
கட்சி தலைவர் ராஜிமானா செய்ய சொல்லி அடித்தார் என ஒரு எம்பி டெல்லியில் அழுதார்
கட்டாயபடுத்தி பதவி பிடுங்கினார்கள் என முதல்வரே அழுகின்றார்
அது கட்சியா? அல்லது கட்ட பஞ்சாயத்தா? கட்டாய பஞ்சாயத்தா?
விட்டால் கட்டாயபடுத்தி வோட்டு வாங்குவார்கள் போலிருக்கின்றது..
இந்த எழுத்தாளர் மீது இதுவரை பெரும் அபிமானம் எல்லாம் இல்லை, ஆனால் மனிதரின் இந்த துணிச்சலுக்கு பெரும் கைதட்டல் கொடுக்க வேண்டியது தமிழரின் கடமை
எழுத்தாளனுக்கு சமூக பொறுப்பு மிக முக்கியம் என்பதை உணரும் தருணம்
வாழ்த்துக்கள் சாரு…
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய வரிகள்
