பன்னீர் vs சின்னாத்தா

பெண் இருந்த இடத்தில் பெண்தான் வரவேண்டும் : சி.ஆர் சரஸ்வதி

ஏம்மா சரஸ்.. இப்பொழுது நடராஜனுக்கு இன்னொரு மனைவி தேடுகின்றார்களா என்ன?


பன்னீர் செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு

நடக்கும் திருப்பங்களில் பெரும் திருப்பம் இதுதான், இன்று மதியம் வரை சின்ன அம்மா என வாழ்க என சொல்லிகொண்டிருந்தவருக்கு, போயஸ் தோட்டத்தின் ஏதோ மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது

பொன்னையனுக்கு முதுகில் தட்டி வாழ்த்துக்கள்

கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா கும்பல் கரைந்து கொண்டிருக்கின்றது, இனி என்ன செய்வார்?

அந்த திடீர் கொண்டையினை களைந்து கூந்தலை அவிழ்த்துவிட்டு தலைவிரி கோலமாக அமர வாய்ப்பிருக்கின்றது.


பன்னீர் செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு

பன்னீருக்கு ஆதரவு தேவையான‌ நிலைதான், ஆனாலும் பன்னீர் செல்வம் இவரின் ஆதரவினை நிராகரித்து மறுபடி போயஸ் கார்டனுக்கு திருப்பி அனுப்பலாம்

சசிகலாவினை திடீரென சரத்குமார் எதிர்க்க காரணம் என்ன?

“என்ன தல வீட்டில் அடி பலமோ”

ஆனாலும் இந்த திருப்பத்தால் தமிழிசை கூட சரத்குமாரை கலாய்க்க வாய்ப்பிருக்கின்ற்து.

தமிழிசையே கலாய்த்துவிட்டால் சரத்குமார் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?


ரிசாட்டின் கதவு திறந்துவிட பட்டால், கிட்டதட்ட 50 பேராவது பன்னீர்செல்வத்தை காண ஓடோடிவருவார்கள் என்பது தெரிகின்றது

அந்த ஆட்டு மந்தை அப்படித்தான் இருந்திருக்கின்றது, ஒரு ஆடு துள்ளி ஓடுவதைதான் எதிர்பார்த்திருக்கின்றது

பன்னீர் எனும் கடா துள்ளி ஓடியபின் எல்லா ஆடுகளும் , கிழட்டு ஆடுகளும் துள்ளி ஓடிகொண்டிருக்கின்றன.

மந்தை காலியாகிகொண்டிருக்கின்றது


 எங்களை யாரும் கடத்தவில்லை என கடிதம் எழுதினர் ரிசார்ட் எம் எல் ஏக்கள்

முன்பு அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதாவும் இப்படித்தான் நான் நலமாக இருக்கின்றேன் என கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடதக்கது.

அவரை போலவே இவர்களையும் யாரும் பார்க்கமுடிவதில்ல்லை என்பதும், நலமாக இருக்கின்றார்கள் எனும் செய்தி மட்டும் வருவதும் கட்சி கலாச்சாரம்.

இதற்கு மேல் விசாரித்தால் ரிசார்ட் ஓணர் வந்துதான் அறிக்கையிடுவாரே தவிர எம் எல் ஏக்களை காட்டவே மாட்டார்கள்.

சரி அப்படி நலமாக இருக்கும் எம் எல் ஏக்கள் ரிசார்ட்டில் ஒன்று கூடி என்ன செய்கின்றார்கள் என யாரும் கேட்க கூடாது

அவர்கள் ஜெயலலிதா இறந்து துக்கத்தை ரூம் போட்டு அழுது தீர்த்து கொண்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான்.