பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

இன்னும் முழு மருந்து கண்டுபிடிக்க‌ படாத நோய்களில் அதுவும் ஒன்று, துரதிருஷ்டவசமாக அது தமிழகத்தில் பரவுகின்றது

இந்நோய் கண்டுவிட்டால் ஒவ்வொரு நாடும் அலறும், விமான நிலையம், பஸ் நிலையம் என கட்டம் போட்டு நிற்பார்கள், பல ஆலோசனைகள் நடக்கும்

நோயாளிகள் அடையாளம் காணபட்டு பிரித்து ஸ்பெஷல் வார்டில் வைக்கபடுவார்கள், அரசாங்கங்கள் மிக மிக வேகமாக இயங்கும்

ஒரு போர்கால அடிப்படையில் இயங்குவார்கள், அந்த நோய் இங்கு இருக்கின்றது என தயங்காமல் அறிவிப்பார்கள், அது உயிர்சம்பந்தபட்ட விஷயம் என்பதால் பத்திரிகைகளும், ஊடகங்களும் முழு முனைப்புடன் செயலாற்றும்

அந்நோய் ஒரு கட்டுபாட்டுக்குள் வந்து பின் ஒழிக்கபட்டபின்புதான் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்

தமிழகத்தில் பத்திரிகைகள் அதனை மர்ம காய்ச்சல் என எழுதுகின்றன‌, அரசோ மக்கள்தான் தவறு, அவர்கள் நடந்தது தவறு, மெதுவாக வந்தது தவறு, இது சாதரண காய்ச்சல் என சொல்கின்றன‌.

தமிழக அரசு அப்படித்தான் சொல்லிகொண்டிருக்கின்றது , இனி இறந்தவர்கள் சின்னம்மா காணாத சோகத்தில் இறந்தவர்கள் என சொன்னாலும் சொல்வார்கள்

பலி எண்ணிக்கை பெருகிகொண்டே செல்லும்

இதோ தமிழகத்தில் பெருகிகொண்டே செல்கின்றது, இதனை தடுக்கவேண்டிய அரசு தன்னையும், கட்சியினையும் காக்க ஆயிரம் பிரச்சினைகள் இருப்பதால் இதனை கண்டுகொள்ளவில்லை

அமைச்சர் விஜயபாஸ்கரோ இதனை பற்றி கேட்டால், அப்படி ஒரு காய்ச்சலே இல்லை என சொல்லிவிட்டு பன்னீர் செல்வத்தை திட்டிகொண்டிருக்கின்றார்

7 பேருக்கு மேல் பலியானதாக செய்திகள் சொல்கின்றன, மக்கள் நெருக்கம் மிகுந்த தமிழகத்தில் இது விஸ்வரூபமாக பரவ நெடுநேரம் ஆகாது

பெரும் சிக்கலை அசால்ட்டாக மறைக்க நினைக்கின்றது அரசு

அட பதர்களா? ஊழலை மறைப்பீர்கள், மர்மத்தை மறைப்பீர்கள் இன்னும் எல்லாவறையும் மறைப்பீர்கள்

மாநிலத்தை தாக்கியிருக்கும் நோயினையுமா மறைக்க வேண்டும்?

அப்படி எல்லாவற்றையும் மர்மமாகவே வைத்திருப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியவில்லை, இது மர்ம மனநோயாக இருக்கலாம்.

தமிழக மக்களை இறைவன் மட்டும்தான் காப்பாற்ற முடியும் போல..

அரசினை விடுங்கள், அது அப்படித்தான்

ஆனால் இவ்விஷயத்தில் பெரும் துரோகம் செய்வது யார் தெரியுமா? தமிழக ஊடகங்களும் பத்திரிகைகளும்

தெரிந்தே மர்ம காய்ச்சல் என எழுதுவது எப்படிபட்ட அயோக்கியதனம்?