பரபரப்பில் ஒரு கிளு கிளுப்பு … குஷ்பூ

உலகின் இதுவரை வந்த அழகிகளில் மிக பெரும் அழகி பைபிள் சொல்லும் யூத பெண்களோ,

காளிதாசன் சொன்ன சாகுந்தலையோ, அலெக்ஸாண்டர் சொன்ன ஆப்கன் பெண்களோ, முகலாயர் கண்ட நூர்ஜகானோ, படூதா சொன்ன சிரிய பெண்களும் அல்ல‌, அண்டனி கண்ட கிளியோபாட்ரோவா அல்ல‌

இந்தியா தந்த காயத்ரி தேவியோ, ஐஸ்வர்யா ராயோ அல்ல‌

அது சின்ன தம்பி குஷ்பூ மட்டுமே….

அந்த குஷ்பூ படத்தை ஏன் 2.5 மணிநேரம் ஓடுமாறு மட்டும் எடுத்தார்கள்? ஒரு பத்து மணிநேரம் ஓடுவது போல் எடுத்தால்தான் என்ன?

போராடிக்கவா செய்கிறது? இல்லை போரடித்துதான் விடுமா?

இப்படி ஒரு அழகு பொம்மை இனி எக்காலத்திலும் உலகிற்கு சாத்தியமே இல்லை..

நெபுகாத்நேச்சர் காலத்தில் அவர் பிறந்திருந்தால் பாக்தாத்தில் பெரும் மாளிகை அவருக்காய் எழும்பியிருக்கும்..

முகலாயர் காலத்தில் மட்டும் அவர் பிறந்திருந்தால் தாஜ்மஹால் , அவர் பெயரில் எழுப்பபட்டிருக்கும்

விதியின் சதியால் பிற்காலத்தில் பிறந்துவிட்டார்.

ஆனாலும் வைரத்தின் ஒளியினை மறைப்பது யார்?

சின்னதம்பி படம் முடியும் பொழுது ஏதோ அழகிய ஓவியம் ஒன்றை பார்த்திவிட்டு திரும்புவதை போல‌ மனதை ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு நிரப்பிகொள்கின்றது.


ஏதோ தைப்பூச திருவிழா கூட்டத்தை காட்டிவிட்டு இவர்கள் எல்லாம் சின்னம்மாவிற்காக கூடிய கூட்டம் என ஜெயா டிவியில் செய்தி சொன்ன பிறகு கோபம் கூடிற்று

அவர்களையே அழைத்து திட்டலாம் என போனை எடுப்பதற்குள்..

சின்னதம்பி படத்தினை போட்டு தொலைத்துவிட்டார்கள், பிறகு என்னாகும் அதே தான்.

குஷ்பு அப்படி ஒரு அழகு, கம்பன் சொல்வான் அல்லவா , அப்படி சொல்லவேண்டுமென்றால் ..

“மையோ மரகதமோ…..அய்யோ இவள் அழியா அழகுடையாள்”.

அப்பொழுது பார்த்தது போல இப்பவும் இருக்கின்றார் குஷ்பூ, இன்னொரு சின்னதம்பியோ அல்லது பார்ட் டூ எடுத்தாலூம் சிக்கலே இல்லை, அப்படியே இருக்கின்றார்.

அழியா அழகுடையவர் குஷ்பூ…..

பன்னீர்செல்வம் சசிகலா பிரச்சினை என்ன ஆனால் என்ன? குஷ்பூ படத்தை பார்த்துகொண்டே இருக்கலாம்

எப்படியோ நம் வீக்னெஸ் ஜெயாடிவி வரை தெரிந்திருக்கின்றது